Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அந்த நடிகருடன் நடிக்க உடனே ஓகே சொன்ன நடிகை.. டக்கென உயர்ந்த சம்பளம்.. கேட்டா ஆடிப்போயிடுவீங்க!
சென்னை: மூத்த நடிகருடன் நடிக்க உடனே ஓகே சொன்ன நடிகைக்கு படக்குழு சம்பளத்தையும் உயர்த்தியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவரது நடிப்பில் அண்மையில் ரூலர் என்ற படம் வெளியானது.
இந்தப் படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் நடிகை வேதிகா, பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்திருந்தார்.
சோனாக்ஷி சின்கா
இந்நிலையில் பாலகிருஷ்ணா தற்போது யோயபதி ஸ்ரீனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில்
கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
வயதை காரணம் காட்டி
ஆனால் சோனாக்ஷி சின்கா நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. பாலகிருஷ்ணாவின் வயதை குறிப்பிட்டு அவர் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியானது.
அவர் கோபக்காரர்
இதனை தொடர்ந்து படக்குழுவினர் மற்ற நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பாலகிருஷ்ணா கோபக்காரர், அவருடன் நடிக்க பயமாக உள்ளது என்று கூறி நழுவி விட்டார்களாம்.
சட்டென ஓகே
இந்நிலையில்தான் படக்குழுவினர் கேத்ரின் தெரசாவை தொடர்பு கொண்டுள்ளனர். அவரோ பாலகிருஷ்ணாவுடன் நடிக்க சட்டென ஓகே சொல்லி விட்டாராம்.
உயர்த்தப்பட்ட சம்பளம்
இதனால் சந்தோஷமடைந்த படக்குழு அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்கா, நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட சில நடிகைகள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர்.
புலம்பும் நடிகைகள்
இந்நிலையில் கேத்ரின் தெரசாவுக்கு ஒரே நேரத்தில் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்ததோடு, சம்பளமும் எகிறியிருக்கிறது. இதுதான் அதிர்ஷ்டம் போல என்று வாய்ப்பை தட்டிக்கழித்த நடிகைகள் புலம்பி வருகிறார்களாம்.