குழந்தைகளை தயவு செய்து இன்வால்வ் பண்ணாதீங்க.. 50 கோடி ஜீவனாம்சம் கேட்ட செலினா ஜெட்லி வேதனை

மும்பை: நடிகையும், முன்னாள் 'மிஸ் இந்தியா'வுமான செலினா ஜெட்லி, தனது கணவரின் துன்புறுத்தல் தாங்காமல் அவரை விட்டு பிரிய முடிவெடுத்துள்ளார். மேலும், 50 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அவரது சட்ட போராட்டத்துக்கு மத்தியில் குழந்தைகளுக்கான தனிப்பட்ட வாழ்க்கை உரிமை வேண்டி ஊடகங்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தன்னை "உடைந்த மனதுடன் இருக்கும் தாய்" என்று இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்ட அவர், தனது சட்டப் பிரச்சினைகள் குறித்த செய்திகளில் குழந்தைகளைப் பற்றிய படங்களைச் சேர்க்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

Actress Celina Jaitly requests Media to avoid showing Her Children photos and case details

தனது முன்னாள் கணவர் பீட்டர் ஹாக் மீது மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் குடும்ப வன்முறை வழக்கில் இந்த வேண்டுகோளை செலினா விடுத்துள்ளார். சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், அவர்களது திருமண வாழ்க்கை துயரங்கள் நிறைந்ததாக இருந்ததை வெளிப்படுத்துகின்றன.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக ஆஸ்திரியாவை விட்டு வெளியேறியதாகத் தெரிவித்த செலினா, ஹாக் மீது உணர்வுபூர்வமான, உடல்ரீதியான, பாலியல் மற்றும் குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளார்.

பீட்டர் ஹாக் மீதான குற்றச்சாட்டுகள்: செலினாவின் மனு இத்தாலி, துபாய், சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த பல வருட அத்துமீறல்களை விரிவாக விவரிக்கிறது. அதில், கர்ப்ப காலத்தில் ஹாக்கின் ஆத்திரமான மற்றும் பொறுப்பற்ற நடத்தைகள், தொடர்ச்சியான குடும்ப வன்முறைகள் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.

ஹாக்கின், செலினாவை ஒரு வேலைக்காரியுடன் ஒப்பிட்டு கேலி செய்ததாகக் கூறினார். கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்த பின்னரும் கூட உடல் ரீதியான வன்முறைகளை தான் தாங்கிக்கொண்டதாக செலினா விவரித்துள்ளார்.

மேலும், சி-செக்‌ஷன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் செலினா தெரிவித்துள்ளார். நிதி கட்டுப்பாடும் இருந்ததாகவும், தனது நடிப்புத் தொழிலைத் தொடர விடாமல் கட்டாயப்படுத்தப்பட்டதால் குறிப்பிடத்தக்க தொழில்ரீதியான பின்னடைவுகள் ஏற்பட்டதாகவும், தனது ஒப்புதல் இல்லாமல் தனது நிதிப் பரிமாற்றங்கள் கையாளப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

50 கோடி ஜீவனாம்சம்: 2017-ஆம் ஆண்டில் தனது பெற்றோர்கள் மற்றும் தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரை இழந்த பிறகு, தான் உணர்ந்த உணர்ச்சிபூர்வமான பாதிப்புகளை செலினா விவரிக்கிறார். இந்த இக்கட்டான காலகட்டத்தைப் பயன்படுத்தி, மும்பையில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் சொத்துரிமைகளை மாற்ற ஹாக் தன்னை சம்மதிக்க வைத்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

சட்டப் போராட்டங்கள் தொடங்கியவுடன், தனது குழந்தைகளைச் சந்திக்கும் உரிமை கட்டுப்படுத்தப்பட்ட அல்லது கண்காணிக்கப்பட்டதாகவும் செலினா குறிப்பிட்டுள்ளார். செலினா மற்றும் பீட்டர் 2010-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2012-ஆம் ஆண்டில் வின்ஸ்டன் மற்றும் விராஜ் ஆகிய இரட்டை மகன்களும், 2017-ஆம் ஆண்டில் ஆர்தர் என்ற மகனும் பிறந்தனர். கணவரை பிரிந்த நிலையில், 50 கோடி ஜீவனாம்சம் கேட்டு அவர் வழக்கு தொடுத்தது பெரும் பேசுபொருளாக மாறியது. மேலும், அவரது குழந்தைகள் பற்றிய தகவல்களும் வெளியாகின.

குழந்தைகள் புகைப்படங்களை காட்டாதீங்க: துரதிருஷ்டவசமாக, அவர்களது மற்றொரு பிறந்த மகன், ஷாம்ஷேர், பிறந்த உடனேயே இறந்துவிட்டான். தனது வழக்கறிஞர் மூலமாக, பாதுகாப்பற்ற மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் இருந்து தப்பிக்க, தான் அணிந்திருந்த உடைகளுடன் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறியதாக செலினா தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தற்போது தனது வழக்கு குறித்த தகவல்களையும் தனது குழந்தைகளின் முகங்களையும் மீடியாவில் காட்ட வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார் செலினா ஜெட்லி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X