Don't Miss!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
வருமானம் இல்லை... பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்: நடிகை சார்மிளா
புதிய பட வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பதாக நடிகை சார்மிளா தெரிவித்துள்ளார்.
சென்னை: போதிய வருமானம் இல்லாததால் குடும்பச் செலவிற்கு கஷ்டப்படுவதாகவும், புதிய வாய்ப்புகளுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை சார்மிளா.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோயினாக நடித்து தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை சார்மிளா. தமிழில் ஒயிலாட்டம் படம் மூலம் ஹீரோயின் ஆனவர். இவன் வேற மாதிரி படத்தில் நாயகியின் அம்மாவாக நடித்திருந்தார்.
திருமண வாழ்க்கையில் தொடர் தோல்வி காரணமாக தற்போது வயதான தாய் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார் இவர். சரியான படவாய்ப்புகள் இல்லாததால் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக ஒன் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் சார்மிளா தெரிவித்துள்ளார்.
அலட்சியம்:
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, "இளவயதில் கிடைத்த பட வாய்ப்புகளை பொறுப்பில்லாமல் சிறுபிள்ளைத்தனமாக அலட்சியம் செய்து விட்டேன். இதனாலேயே என் மீது தவறான இமேஜ் ஏற்பட்டுவிட்டது.
பொறுப்பாகி விட்டேன்:
ஆனால், நான் இப்போது அப்படியில்லை. மாறி விட்டேன். பொறுப்பாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்கிறேன். ஆனால், எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் இப்போது இல்லை. மாதத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே ஷூட்டிங் உள்ளது.
குடும்ப கஷ்டம்:
தற்போது படுத்த படுக்கையாக இருக்கும் வயதான அம்மாவையும், மகனையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன். மகனின் படிப்புச் செலவிற்கு நடிகர் விஷால் உதவி செய்கிறார். ஆனால், குடும்பச் செலவிற்கு போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறேன்.
புதிய வாய்ப்புகள்:
நான் அதிகம் சம்பளம் கேட்பேன் என தவறாக நினைத்துக் கொண்டு பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என்னை அணுகுவதில்லை. ஆனால், நான் அப்படியில்லை. மற்ற வயதான நடிகைகளைப் போல் அம்மா வேடங்களில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். எனவே, தமிழ் மற்றும் மலையாளத்தில் புதிய வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!