Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிராக்கில் தங்கச்சிலை போல ஜொலிக்கும் நடிகை ஜெனிலியா!
மும்பை: தங்கத்தில் வடித்த சிலை போல போட்டோஷூட்டில் கலக்கி இருக்கும் நடிகை ஜெனிலியா அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பாய்ஸ்,சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்தவர் இவர்.
ஷுட்டிங் செல்வதாக சென்ற தனுஷ் பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் திரைத்துறை!
தொடர்ந்து பாலிவுட்டில் நடிகையாகவும் தயாரிப்பாளராகும் இருந்து வரும் இவர் இப்பொழுது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார் அதற்காக போட்டோஷூட்டில் மும்முரமாக இருக்கும் இவர், விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.
மீண்டும் தமிழ் படங்களில்
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட இளமை ததும்பும் கதையில் புதுமுகங்களுடன் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஜெனிலியா. இந்தி திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழில் இப்போது எக்கச்சக்கமான ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நிலையில் மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேவரிட் திரைப்படமாக
குறும்புத் தனமான பேச்சு இளமை மாறாத குணம் என படங்களில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும் அவ்வாறே இருக்கும் ஜெனிலியா இரண்டாவது படத்திலேயே விஜயுடன் இணைந்து சச்சினில் நடிக்க இந்த படம் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரிட் திரைப்படமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடைசியாக வேலாயுதம்
தமிழில் நடித்த சில படங்களிலேயே முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்த இவர் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் மூலம் அனைவரது மனதிலும் வெகுளியான ஹாசினி ஆக இன்று வரை பதிந்துள்ளார். நடிகை ஜெனிலியா இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் ஹாசினி ரோல் ஒரு மிகச்சிறந்த கதாபாத்திரம் என சொல்லலாம்.
கடைசியாக தமிழில் வேலாயுதம் திரைப்படத்தில் நடித்திருந்த இவர் அதன்பிறகு இந்தியில் ஒருசில திரைப்படங்கள் நடித்த பிறகு திருமணம் செய்து கொள்ள. திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு ஒரு சில படங்களை தயாரித்து தயாரிப்பில் இறங்கியுள்ளார்.
அம்சமாக போஸ்
இந்நிலையில் மீண்டும் நடிப்பைத் தொடங்க தயாராக இருக்கும் ஜெனிலியா அதற்காக இப்பொழுது விதமான போட்டோஷூட் களை நடத்தி இணையதளத்தில் கலக்கி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது தங்கத்தால் செய்த ஆடையை போல பார்க்கவே பிரம்மாண்டமாக இருக்கும் தங்க நிறத்தில் இருக்கும் வடித்து வைத்த சிலை போல அம்சமாக போஸ் கொடுத்துக் கொண்டு நிற்கும் ஜெனிலியாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை தெறிக்க விட்டு வைரலாகி வருகிறது.