தயாரிப்பு நிர்வாகி மீது ஹீரோயின் பாலியல் புகார்
மலையாள சினிமா தயாரிப்பு நிர்வாகி ஷாஜி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புது ஹீரோயின் ஜோதி புகார் தெரிவித்துள்ளார்.
ஜெயராம் நடிக்கும் சர் சிபி என்ற மலையாளப் படத்தின் நாயகி ஜோதி கிருஷ்ணா. படபிடிப்புக்காக ஓட்டல் அறையில் தங்கி இருந்தபோது அந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகி ஷாஜி, பலவந்தமாக அறைக்குள் வந்து தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மலையாள நடிகர்கள் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார் ஜோதி. இருவரிடமும் சங்க நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். தனிப்பட்ட விரோதத்தை, பாலியல் பலாத்காரம் மூலம் தீர்த்துக் கொள்ள ஷாஜி முயன்றார் என்பது அம்பலமானது.
நடந்த சம்பவம் உண்மைதான் என்பது தெரிந்ததும், ஷாஜியை மலையாள சினிமாவிலிருந்து 6 மாதத்துக்கு தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான நடவடிக்கையை நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், கேரள சினிமா தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











