தலைநகரம் நாயகி ஜோதிர்மயி சினிமாவுக்கு குட்பை?

தலைநகரம் மூலம் தமி்ழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் மலையாள நடிகை ஜோதிர்மயி. இதையடுத்து அவர் நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்பட பல படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மொத்தம் 30 படங்களில் நடித்துள்ளார்.
அன்மையில் ஜோதிர்மயி விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது தான் பலர் அட இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று அதிசயித்தனர். அந்த அளவுக்கு தனது தனிப்பட்ட வாழ்க்கையையும், சினிமாவையும் தனித்தனியாக வைத்திருந்தார்.
விவாகரத்து கேட்டிருக்கும் அவர் என்னடா திருமண வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையில் உள்ளாராம். இதையடுத்து சத்தமில்லாமல் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டதாக கேரள திரையுலகில் பரவலாக பேசப்படுகிறது.
கையில் இருந்த படங்களை முடித்துக் கொடுத்துவிட்டாராம். புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லையாம்.
Comments


Click it and Unblock the Notifications