Don't Miss!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நான் அரசியலுக்கு வந்தால் திருமணம் செய்ய மாட்டேன், குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன்: கங்கனா
அரசியலுக்கு வந்தால் திருமணம் செய்ய மாட்டேன் என கங்கனா கூறியுள்ளார்
மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அரசியலுக்கு வந்தால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தமிழில் ஜெயம்ரவியுடன் தாம் தூம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தியில் இப்போது வரலாற்று படமான மணிகர்னிகாவில் நடித்து வருகிறார்.
இந்திய ஜனநாயகத்தின் சிறந்த தலைவர் என பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து வரும் அவர், சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கங்கனா, நான் இப்போது மணிகர்னிகா படத்தில் நடித்து வருகிறேன். இப்போது தான் பங்கா திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. நான் எப்போதும் ஒரு வேலையை செய்தால் அதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு செய்வேன்.
அதனால் நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று நினைத்தால், திருமணம் செய்துகொள்ள மாட்டேன், குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன். வேறு எந்த வேலையிலும் ஈடுபட மாட்டேன். மக்களுக்கு சேவையாற்றும் ஊழியராக இருப்பவர் தான் அரசியல்வாதி என்றார்.
பிரதமர் மோடியின் பால்ய வயது வாழ்க்கையை சித்தரிக்கும் ச்சலோ ஜீத்தே ஹெய்ன் என்ற குறும்படத்தை பார்த்த பிறகு, ஜனநாயகத்தின் சிறந்த தலைவர் என பிரதமர் மோடியை புகழ்ந்தார் கங்கனா. அதனால் அவருக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதாக பலரும் கருதுகின்றனர்.