Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
காதலராய் இருந்தபோது தனது மெழுகு சிலையை பார்த்து பிரமித்த கவுதம் கிட்ச்லு.. உண்மையை உடைத்த காஜல்!
சென்னை: நடிகை காஜல் அகர்வால் தனது மெழுகு சிலையுடன் தனது கணவர் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு ஒரு உண்மையை போட்டுடைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும் கடந்த அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற்றது.
மாலத்தீவில் ஹனிமூன்
தனது நீண்டநாள் காதலரான தொழிலதிபர் கவுதம் கிட்ச்லுவை கரம் பிடித்த காஜல், மாலத்தீவில் தனது ஹனிமூனை கொண்டாடினார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.
திருமணத்திற்கு பிறகு..
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள காஜல் அகர்வால் தொடர்ந்து தனது ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அதனை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகு ஹாட்னஸ் கூடி விட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உண்மையை கூறிய காஜல்
இந்நிலையில் இன்று ஒரு போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள காஜல், ஒரு உண்மையையும் கூறியுள்ளார். அதாவது, சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கடந்த ஆண்டு காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டது.
முதல் தென்னிந்திய நடிகை
மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியத்தில் முதல் முதலில் மெழுகு சிலை வைக்கப்பட்ட தென்னிந்திய நடிகை என்ற சிறப்பையும் பெற்றார் காஜல். மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை வைக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு ஆகியுள்ளது.
சிலை திறப்புக்கு முன்பே..
இதனை முன்னிட்டு மெழுகு சிலையுடன் தானும் கவுதம் கிட்ச்லுவும் சிலையுடன் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் மெழுகு சிலை திறப்புக்கு முன்பே, கவுதம் கிட்சுலு தனது காதலராய் இருந்த போது தனது சிலையை பார்த்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.