Don't Miss!
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சோதனையான காலகட்டம்.. தொடர்ந்து படங்கள் பிளாப்.. விரக்தியில் கீர்த்தி சுரேஷ் !
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் சமீபகாலமாக தோல்வி அடைந்து வருவதால் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேகனா, சுரேஷ்குமாரின் மகளான கீர்த்தி சுரேஷ்,கீதாஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமான நடித்து திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.
3 மாநிலங்களில் வரிவிலக்கு பெற்ற அக்ஷயின் சாம்ராட் பிரித்விராஜ்.. சர்வதேச அளவில் பிரம்மாண்ட ரிலீஸ்!
இதையடுத்து, ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே நல்ல நடிகை என பெயர் எடுத்தார். அது மட்டும் இல்லாமல் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம், தெலுங்கில் 'மகாநடி' என்ற பெயரிலும் தமிழில் 'நடிகையர் திலகம்' என்று பெயரில் வெளியானது.
தேசிய விருது நாயகி
நடிகையர் திலகம் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போவதான தகவல் வெளியான போது, பலர் கீர்த்தி சுரேஷின் நடிப்பு குறித்து கடுமையாக விமர்சித்தார்கள். அவை அனைத்தும் அமைதியாக இருந்த கீர்த்தி சுரேஷ், அந்த படத்தில் நடித்ததற்க தேசிய விருதை வாங்கி, கேலி பேசியவர்களின் வாயை அடைத்தார்.
உருக்கமான அறிக்கை
இதையடுத்து, தமிழ், தெலுங்கு,மலையாளம் என அனைத்து மொழிப்படங்களிலும் ரவுண்டு கட்டி நடித்து வந்தார். இதனால் இவரின் சம்பளமும் கணிசமாக உயர்ந்தது. ஆனால், கீர்த்தி சுரேஷிற்கு கடந்த சில காலங்களாக படங்கள் அனைத்தும் படுதோல்வி சந்தித்து வருகின்றன. இதனால், கீர்த்தி சுரேஷ் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சோதனையான காலம்
அதில், ஒரு நடிகராக இருப்பது என்பது கடினமான பயணம், நாங்கள் முழுவது உயர்வையும் தாழ்வையும் காண்கின்றோம். அதுவே பெரும்பலாலும் நமது இலக்கை தீர்மானிக்கிறது. சமீபகாலம் எனக்கு ஒரு சோதனையான காலகட்டமாகும், மேலும் எனது சிறப்பை உலகிற்கு கொண்டு வருவதற்கு நான் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதை உணர வைத்த ஒரு கட்டம். என் இதயம் முழுவதும் நன்றி உணர்வோடும் சந்தோஷமும் நிறைந்துள்ளது.
அனைவருக்கும் நன்றி
சாணிக்காயிதம் மற்றும் சர்காரு வாரி பாட்டா படங்களுக்கு நிறைய அன்பு கிடைத்தது. நான் எப்போதும் எல்லைகளை தாண்டி, விரிவுபடுத்தப்பட்ட நம்பிக்கையோடு தொடர்ந்து முன்னேறி கொண்டு இருப்பேன். விளைவுகளை பற்றி கவலைப்படமாட்டேன். சாணி காயிதம், சர்காரு வாரி பாட்டா பட குழுவினருக்கும், அவர் பணியாற்றிய இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்