Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
சோதனையான காலகட்டம்.. தொடர்ந்து படங்கள் பிளாப்.. விரக்தியில் கீர்த்தி சுரேஷ் !
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் சமீபகாலமாக தோல்வி அடைந்து வருவதால் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேகனா, சுரேஷ்குமாரின் மகளான கீர்த்தி சுரேஷ்,கீதாஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமான நடித்து திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.
3 மாநிலங்களில் வரிவிலக்கு பெற்ற அக்ஷயின் சாம்ராட் பிரித்விராஜ்.. சர்வதேச அளவில் பிரம்மாண்ட ரிலீஸ்!
இதையடுத்து, ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே நல்ல நடிகை என பெயர் எடுத்தார். அது மட்டும் இல்லாமல் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம், தெலுங்கில் 'மகாநடி' என்ற பெயரிலும் தமிழில் 'நடிகையர் திலகம்' என்று பெயரில் வெளியானது.
தேசிய விருது நாயகி
நடிகையர் திலகம் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போவதான தகவல் வெளியான போது, பலர் கீர்த்தி சுரேஷின் நடிப்பு குறித்து கடுமையாக விமர்சித்தார்கள். அவை அனைத்தும் அமைதியாக இருந்த கீர்த்தி சுரேஷ், அந்த படத்தில் நடித்ததற்க தேசிய விருதை வாங்கி, கேலி பேசியவர்களின் வாயை அடைத்தார்.
உருக்கமான அறிக்கை
இதையடுத்து, தமிழ், தெலுங்கு,மலையாளம் என அனைத்து மொழிப்படங்களிலும் ரவுண்டு கட்டி நடித்து வந்தார். இதனால் இவரின் சம்பளமும் கணிசமாக உயர்ந்தது. ஆனால், கீர்த்தி சுரேஷிற்கு கடந்த சில காலங்களாக படங்கள் அனைத்தும் படுதோல்வி சந்தித்து வருகின்றன. இதனால், கீர்த்தி சுரேஷ் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சோதனையான காலம்
அதில், ஒரு நடிகராக இருப்பது என்பது கடினமான பயணம், நாங்கள் முழுவது உயர்வையும் தாழ்வையும் காண்கின்றோம். அதுவே பெரும்பலாலும் நமது இலக்கை தீர்மானிக்கிறது. சமீபகாலம் எனக்கு ஒரு சோதனையான காலகட்டமாகும், மேலும் எனது சிறப்பை உலகிற்கு கொண்டு வருவதற்கு நான் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதை உணர வைத்த ஒரு கட்டம். என் இதயம் முழுவதும் நன்றி உணர்வோடும் சந்தோஷமும் நிறைந்துள்ளது.
அனைவருக்கும் நன்றி
சாணிக்காயிதம் மற்றும் சர்காரு வாரி பாட்டா படங்களுக்கு நிறைய அன்பு கிடைத்தது. நான் எப்போதும் எல்லைகளை தாண்டி, விரிவுபடுத்தப்பட்ட நம்பிக்கையோடு தொடர்ந்து முன்னேறி கொண்டு இருப்பேன். விளைவுகளை பற்றி கவலைப்படமாட்டேன். சாணி காயிதம், சர்காரு வாரி பாட்டா பட குழுவினருக்கும், அவர் பணியாற்றிய இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.