twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சோதனையான காலகட்டம்.. தொடர்ந்து படங்கள் பிளாப்.. விரக்தியில் கீர்த்தி சுரேஷ் !

    |

    சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் சமீபகாலமாக தோல்வி அடைந்து வருவதால் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    மேகனா, சுரேஷ்குமாரின் மகளான கீர்த்தி சுரேஷ்,கீதாஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமான நடித்து திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

     3 மாநிலங்களில் வரிவிலக்கு பெற்ற அக்ஷயின் சாம்ராட் பிரித்விராஜ்.. சர்வதேச அளவில் பிரம்மாண்ட ரிலீஸ்! 3 மாநிலங்களில் வரிவிலக்கு பெற்ற அக்ஷயின் சாம்ராட் பிரித்விராஜ்.. சர்வதேச அளவில் பிரம்மாண்ட ரிலீஸ்!

    இதையடுத்து, ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    நடிகை கீர்த்தி சுரேஷ்

    நடிகை கீர்த்தி சுரேஷ்

    நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே நல்ல நடிகை என பெயர் எடுத்தார். அது மட்டும் இல்லாமல் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம், தெலுங்கில் 'மகாநடி' என்ற பெயரிலும் தமிழில் 'நடிகையர் திலகம்' என்று பெயரில் வெளியானது.

    தேசிய விருது நாயகி

    தேசிய விருது நாயகி

    நடிகையர் திலகம் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போவதான தகவல் வெளியான போது, பலர் கீர்த்தி சுரேஷின் நடிப்பு குறித்து கடுமையாக விமர்சித்தார்கள். அவை அனைத்தும் அமைதியாக இருந்த கீர்த்தி சுரேஷ், அந்த படத்தில் நடித்ததற்க தேசிய விருதை வாங்கி, கேலி பேசியவர்களின் வாயை அடைத்தார்.

    உருக்கமான அறிக்கை

    உருக்கமான அறிக்கை

    இதையடுத்து, தமிழ், தெலுங்கு,மலையாளம் என அனைத்து மொழிப்படங்களிலும் ரவுண்டு கட்டி நடித்து வந்தார். இதனால் இவரின் சம்பளமும் கணிசமாக உயர்ந்தது. ஆனால், கீர்த்தி சுரேஷிற்கு கடந்த சில காலங்களாக படங்கள் அனைத்தும் படுதோல்வி சந்தித்து வருகின்றன. இதனால், கீர்த்தி சுரேஷ் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    சோதனையான காலம்

    சோதனையான காலம்

    அதில், ஒரு நடிகராக இருப்பது என்பது கடினமான பயணம், நாங்கள் முழுவது உயர்வையும் தாழ்வையும் காண்கின்றோம். அதுவே பெரும்பலாலும் நமது இலக்கை தீர்மானிக்கிறது. சமீபகாலம் எனக்கு ஒரு சோதனையான காலகட்டமாகும், மேலும் எனது சிறப்பை உலகிற்கு கொண்டு வருவதற்கு நான் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதை உணர வைத்த ஒரு கட்டம். என் இதயம் முழுவதும் நன்றி உணர்வோடும் சந்தோஷமும் நிறைந்துள்ளது.

    அனைவருக்கும் நன்றி

    அனைவருக்கும் நன்றி

    சாணிக்காயிதம் மற்றும் சர்காரு வாரி பாட்டா படங்களுக்கு நிறைய அன்பு கிடைத்தது. நான் எப்போதும் எல்லைகளை தாண்டி, விரிவுபடுத்தப்பட்ட நம்பிக்கையோடு தொடர்ந்து முன்னேறி கொண்டு இருப்பேன். விளைவுகளை பற்றி கவலைப்படமாட்டேன். சாணி காயிதம், சர்காரு வாரி பாட்டா பட குழுவினருக்கும், அவர் பணியாற்றிய இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    English summary
    Keerthy Suresh Emostional Statement : இது மிகவும் சோதனையான காலகட்டம் என நடிகை கீர்த்தி சுரேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X