நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார் !
சென்னை : பிரபல முன்னணி நடிகை கீர்த்தி இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறது.
அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

2,40,842 பேருக்கு பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,40,842-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2.65 லட்சம் பேர் ஒரே நாளில் குணம் அடைந்த நிலையில், 3,741- பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 19 கோடியே 50 லட்சத்தை தாண்டியுள்ளது.

வீடுகளுக்கே சென்று தடுப்பூசி
தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி இயக்கம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதற்கான முகாம்களில் கோவிட்ஸில்ட்,கோவாக்சின் போட்டுக்கொள்ளலாம். தற்போது 18 வயதிற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நடைமுறை தொடங்கி உள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சிரமங்களை அறிந்து , அவர்களின் வீடுகளுக்கே சென்று சென்றுகசென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டார்
இந்நிலையில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இது பொது மக்களுக்கு ஓர் விழிப்புணர்வாக அமைந்துள்ளது.

குந்தவையாக
நடிகை கீர்த்தி சுரேஷ், மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், அண்ணாத்த, சாணிக்காகிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











