Don't Miss!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- News சென்னை தடுமாறுவது ஏன்? 47 வகையான முயற்சிகளை செய்ததால் தான் இந்த வாக்குப்பதிவே : ஜெ.ராதாகிருஷ்ணன்
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தொடரும் கற்பழிப்புகள்.. பேசுகிறோம்.. பேசுகிறோம்.. ஒன்னும் நடக்கலையே..: கொந்தளிக்கும் குஷ்பு!
சென்னை: இந்தியாவில் நாள்தோறும் பெண் பலாத்காரம் செய்யப்படுகிறாள்.. இதுபற்றி பேசுகிறோம்.. பேசுகிறோம்..பேசிக்கொண்டே இருக்கிறோம்..ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என்று மும்பை பெண் போட்டோகிராபர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் கொந்தளிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மும்பையில் பெண் போட்டோகிராபர் நேற்று பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகை குஷ்பு.
நடிகை குஷ்பு இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், இதுபற்றி தேசிய அளவில் விவாதம் நடத்த அழைப்பு விடுப்போம். 2 நாட்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்துவோம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு புதிய பெயரை சூட்டுவோம்.. இந்த புதிய வழக்குக்காக நாமும் காத்திருப்போம்..
டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயா ஒன்றும் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட முதல் பெண்ணும் அல்ல.. மும்பையில் பாதிக்கப்பட்ட பெண்ணும் கடைசியாகவும் இருக்கப் போவதில்லை.. இந்தியாவில் ஒவ்வொருநாளும் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இது பற்றி பேசுகிறோம்.. பேசுகிறோம்..பேசுகிறோம்.. ஆனால் ஒன்றுமே நடக்கவில்லையே...
என்னுடைய ஜனநாயக இந்தியாவில் ஏன் பெண்களால் அச்சமின்றி இருக்க முடிவதில்லை? என்று பதிவிட்டிருக்கிறார்.