Don't Miss!
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Sports ஜடேஜா பேட்டிங் முதல் ருதுராஜ் கேப்டன்சி வரை.. சிஎஸ்கே செய்த தவறுகள்.. தோல்விக்கு காரணமான 3 சம்பவம்!
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆசைகாட்டி மோசம் பண்ண கிரண்..போன் போட்டா என்ன நடக்குது தெரியுமா?
சென்னை : நடிகை கிரண் ஆசை காட்டி மோசம் செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. கிரணின் இந்த செயலியை முடக்க வேண்டும் என எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.
சீயான் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் அச்சில் வார்த்த சிலை போல இருந்தார் நடிகை கிரண். அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாத்துடன் வின்னர், கமலுடன் அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
இந்த திரைப்படங்கள் அனைத்தும் வசூலை வாரிக்குவித்த நிலையிலும் இவருக்கு படவாய்ப்பு இல்லை. இதையடுத்து, விஜய் நடத்த திருமலை படத்தில் "வாடியம்மா ஜக்கம்மா" என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு, ஐட்டம் பாடலுக்கு ஆட ரெடி என பச்சைக்கொடிகாட்டினார்.
கவர்ச்சியில் அத்துமீறும் கிரண்… இந்த வயசுல இதெல்லாம் தேவையா விளாசும் நெட்டிசன்ஸ்!
ஓவர் கவர்ச்சி
அதன் பிறகும் படவாய்ப்பு இல்லாததால், பாலிவுட்,டெலிவுட் என அலைந்து அலுத்துப்போனார். இதையடுத்து, சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முத்துனகத்திரிக்காய் படத்தில் அம்மா ரோலில் நடித்திருந்தார். மேலும், விஷாலுடன் ஆம்பள படத்தில் ஆண்டி ரோலில் நடித்திருந்தார். பட வாய்ப்பு வரவேண்டும் என்றால் கவர்ச்சி காட்டியே ஆகவேண்டும் என அந்த படத்தில் ஒவர் கவர்ச்சி காட்டினார்.
எல்லை மீறும் கவர்ச்சி
நடிகை கிரணுக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக படவாய்ப்புகள் சரிவர கிடைக்கவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடத் தொடங்கினார் கிரண். இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததால், நித்தம் நித்தம் எல்லை மீறும் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து பணத்தை அள்ளினார்.
கிரண் ஆப்
இதுல வர பணமும் மேடமுக்கு பத்தாததால், தனது பெயரில் புதிய ஆப் ஒன்றை தொடங்கினார். அந்த ஆப் மூலம் கவர்ச்சி போட்டோக்களை பெறுவதற்கு 2000 ரூபாயும், வீடியோ காலில் அரை மணி பேசுவதற்கு 30,000 ரூபாயும், 15 நிமிடங்கள் பேசுவதற்கு 13,000 ரூபாய் கட்டணம் என ஒரு லிஸ்டையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதுமட்டுமின்றி, இந்த ஆப்பிற்குள் நுழையவே 49 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டுமாம்.
ஆசைகாட்டி மோசம்
இதன் மூலம் நடிகை கிரண் பல பித்தலாட்ட வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவருடன் ஆடியோ காலில் பேச ஒருவர் ரூ.5 ஆயிரம் செலுத்தினாராம். சிறிது நேரம் கழித்து அழைப்பு வந்ததும், அதை எடுத்து ஹலோ என்று சொன்னதும் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், கிரண் ஆசைகாட்டி ஏமாற்றிவிட்டதாக கூறி புகார் எழுந்துள்ளது. கிரணின் இந்த செயலியை முடக்க வேண்டும் என எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.