Kiran: வெறும் உள்ளாடை.. எல்லை மீறும் கிரண்.. பார்த்து பதறும் ஃபேன்ஸ்!
சென்னை: ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கிரண் ரத்தோட், தற்போது கவர்ச்சி புயலாக மாறி, இணையத்தில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.
இயக்குனர் சரண் இயக்கிய ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். அந்த படத்தில் அம்சமான அழகுடன் படத்திற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஜெமினி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கமலஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்துடன் வின்னர், விஜயகாந்துடன் தென்னவன் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களிடன் படத்தில் நடித்தார்.
நடிகை கிரண் ரத்தோட்: பட வாய்ப்பு குறைந்ததால், கவர்ச்சியாக ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினார். மேலும், எஸ்.ஜே.சூர்யாவின் நியூ படத்தில் மாமி கதாபாத்திரத்தில் நடித்து, டபுள் மீனிங்கில் வசனமும் பேசி, படத்தில் கவர்ச்சியில் எல்லை மீறி நடித்திருந்தார்.அந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்பும் வராததால் தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்த கிரணுக்கு விஷால் நடித்த ஆம்பள படத்தில், ஆன்ட்டி கதாபாத்திரத்தில் கவர்ச்சியை தூக்கலாக காட்டி நடித்திருந்தார்.

நீச்சல் குளத்தில் கிரண்: தற்போது, கிரண் தனது இன்ஸ்டாகிராமில், கவர்ச்சி வீடியோ ஒன்றை போட்டுள்ளார். அதாவது வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு கவர்ச்சி புயலாக மாறி உள்ளர். அதை பார்த்த பலர், பட வாய்ப்புக்காக இவ்வளவு அசிங்கமாக கவர்ச்சி காட்டலாமா என கேட்டு வருகின்றனர். ஆனால், எதை பற்றியும் கவலைப்படாத நடிகை கிரண் ரத்தோட் தொடர்ந்து இதுபோன் கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோவை பதிவிடுவதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.
வெறும் உள்ளாடை: கவர்ச்சி வீடியோ போடுவது குறித்து அண்மையில் பேசி இருந்த கிரண், கொரோனா காலத்தில் பணத்திற்காக மிகவும் சிரமப்பட்டேன். அப்போது, என் நண்பர்கள் குழுவில் கடனாக பணம் கிடைக்குமா என கேட்டேன். அதில், சிலர் நாங்கள் பணம் தருகிறோம், அதற்கு பதிலாக என்ன தருவாய் என்று என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் அந்த நேரம் நான் மிகவும் மனவேதனை அடைந்தேன். அதில் இருந்து தான் நான் இணையத்தில் கவர்ச்சியாக வீடியோவெளியிட ஆரம்பித்தேன் என பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











