Don't Miss!
- News தமிழக லோக்சபா தேர்தல் 2024: 33 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் லிஸ்ட்!
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Finance ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 54% உயரும்.. அமெரிக்க நிறுவனத்தின் பலே கணிப்பு..!
- Technology வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
அதிமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - குஷ்பு
சென்னை: அதிமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கூறியிருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சாந்தோம் பகுதியில் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கணவர் சுந்தர்.சியுடன் வந்து வாக்கினைப் பதிவு செய்தார்.
வாக்களித்த பின் நடிகை குஷ்பூ அளித்த பேட்டியில் '' தேர்தல் ஆணையம் கைப்பற்றிய 100 கோடி ரூபாய்க்கும் மேலான பணத்தில் 99% அதிமுகவினருடையது தான்.
அதிமுகவினருக்கு தோல்வி பயம் வந்ததால் எப்படியாவது பணத்தைக் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
ஆனால் ஜனநாயக முறையில் வாக்களிக்கும் மக்கள் தங்களுக்கு யார் நல்லது செய்வார்கள் எனத் தீர்மானிக்கும் நாள் இது.
இதுவரை எந்தத் தேர்தலிலும் 2 தொகுதிகளுக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது கிடையாது. நிச்சயம் அதிமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்'' என்று கூறினார்.