Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வானவில் போல கலர் கலராக ஜொலிக்கும் லாவண்யா… வைரலாகும் போட்டோக்கள்
சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் எப்படியாவது நமக்கு ஒரு இடம் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தில் உள்ள நடிகை லாவண்யா திரிபாதி அதற்கான வேலையில் முழுமூச்சாக இறங்கிவிட்டார் என்பது தெரிகிறது. அதற்காக வழக்கம்போலவே மற்ற நடிகைகள் போட்டோ சூட் நடத்தியது போல், தானும் போட்டோ சூட் நடத்தி அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி தமிழ் ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாருடன் டூயட் பாடி தமிழ் சினிமாவிற்குள் பிரம்மன் திரைப்படம் மூலம் காலடி எடுத்து வைத்தார் டோலிவுட் முன்னணி கதாநாயகியான லாவண்யா திரிபாதி. தமிழ் சினிமாவில் அவரது முதல் என்ட்ரியே அவருக்கு சரியாக அமையாததால் சிறப்பான நடிப்பு, அழகு, திறமை இவை அனைத்தும் இருந்தும் அவரால் கோலிவுட்டில் ஜொலிக்க முடியவில்லை.
அதனால் அவரின் காற்று டோலிவுட் பக்கம் திரும்பியது. அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருடத்திற்கு நான்கு படங்களுக்கும் மேலாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினர். 2017ஆம் ஆண்டில் சி.வி.குமார் இயக்கத்தில் திரில்லர் திரைப்படமான மாயவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் லாவண்யா திரிபாதி. அதுவும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால் அவரது முழு கவனமும் தெலுங்கு சினிமாவை நோக்கி திரும்பியது.
இப்படி கடல் கடந்து வேறு திசை நோக்கி சென்ற காற்றழுத்த திசை தற்போது மீண்டும் தனது சூறாவளி காற்றுடன் இளைஞர்களை குறி வைத்து தாக்கும் வகையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.
இதை பார்த்த நம்முடைய காளைகள் சும்மா இருப்பார்களா என்ன? உடனே அந்த வண்ணமிகு புகைப்பங்களை வைரலாகி வருகிறார்கள். அந்த கலர் கலர் கனவுகள் உங்கள் பார்வைக்கு கண் முன்னே இருக்கின்றன.
இளம் பச்சை உடைஉடுத்தி இளம் நெஞ்சங்களை இலக வைக்கிறார் இந்த இளம் தேவதை. முன்னழகையும் பின்னழகையும் கண்ணாடியின் பிம்பங்களில் காட்டி கண்ணாடி போல் இதயங்களை நொறுக்குகிறாள்.
ஷார்ட் ஸ்கெர்ட்டிலும் கியூட் ரொமான்டிக் லுக்கிலும் ஸ்கோரை அள்ளுகிறார் வெஸ்டர்ன் கேர்ள்.
ஹாட் மிர்ச்சி மசாலாவே கன்னத்தில் கை வைத்து பார்ப்பதின் அர்த்தம் தான் என்ன?
காலைப் பொழுதில் சூரியனின் ஒளியையும் தாண்டி ஒளிர்விடும் ஆரஞ்சு மலரே!
ரோஜாக்களில் ஒன்று அதன் ரோஜா கூட்டத்தில் இருந்து எழுந்து சிரிப்பு
சிதறல்களுடன் நம் கண் முன்னே நடந்து வருகிறது.
ஹாட் பாதி கியூட் பாதி கலந்து செய்து கலவை இவள்!
வெப்பத்தின் தாக்கத்தால் ஓவர்கோட் போடவில்லையா? அல்லது எங்களை
வெப்பத்தில் ஆழ்த்துவதற்காக இப்படி செய்தாயா? சொல்லடி கள்ளி !!!
ஐயோ! பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஓ ஓ கண்ணே!!!
இப்படி எங்கள் இளைஞர்களை கலர் கலராக தாக்கினால் அவர்களின் நிலை என்னாகும். நிச்சயம் லாவண்யா திரிபாதிக்கு பல வாய்ப்புகள் இந்த புகைப்படங்களை பார்த்த பின் கைகூடும். பிறகு அம்மணி டோலிவுட். கோலிவுட் என மாறி மாறி கலக்க போறாங்க.