கேரளா சேலையில் சொக்கவைக்கும் மஞ்சிமா மோகன்!
சென்னை: தமிழில் நடித்த முதல் படத்திலேயே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அறிமுகமாகி புகழ் பெற்றவர் நடிகை மஞ்சிமா மோகன்
கங்கனா ரனாவத் நடிப்பில் இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற குயின் திரைப்படத்தின் மலையாள ரீமேக்கில் நடித்து வருகிறார்
தமிழில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ள எஃப் ஐ ஆர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இப்போது கேரளா சேலையில் சொக்க வைக்கும் அழகில் மஞ்சிமா மோகன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

இரண்டாவது முறையாக இணைந்த
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கதாநாயகியாகவும் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை மஞ்சிமா மோகன் தமிழ் சினிமாவிற்கு அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு இரண்டாவது முறையாக இணைந்த அச்சம் என்பது மடமையடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்து புகழ்பெற்றவர. இப்பொழுது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.

முதல்முறையாக தங்கை வேடத்தில்
முதல்முறையாக தங்கை வேடத்தில் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம்,களத்தில் சந்திப்போம் என சில படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த மஞ்சிமா மோகன் முதல்முறையாக தங்கை வேடத்தில் நடித்த திரைப்படம துக்ளக் தர்பார். விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கையாக மஞ்சிமா மோகன் நடித்து இருப்பார்

மலையாளத்தில் ரீமேக்
ஹிந்தியில் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் திரைப்படம் இப்பொழுது தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மலையாளத்தில் இந்த படத்திற்கு ஜாம்ஜாம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் மிக விரைவிலேயே ரிலீஸாக உள்ளது. மஞ்சிமா மோகன் முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
Recommended Video

கேரளா சேலையில் சொக்கவைக்கும் அழகில்
விஷ்ணு விஷால் நடித்து தயாரித்து வரும் எஃப் ஐ ஆர் திரைப்படம் அனைத்து பணிகளும் முடிந்து ஒரு வழியாக அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய படமாக அக்டோபர் 31 லேடீஸ் நைட் என்ற படத்திலும் தற்போது நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படம் உருவாகிறது. இவ்வாறு படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் அதே சமயம் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேரளா சேலையில் சொக்கவைக்கும் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











