Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஒவ்வொரு சூரிய நிழலிலும் ஒரு கனவு இருக்கிறது.. மஞ்சிமா மோகனின் கருத்து !
சென்னை : மஞ்சிமா மோகன், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு கேப்ஷனை வெளியிட்டுள்ளார்.
நடிகை மஞ்சிமா மோகன் மலையாளம் ,தமிழ் , கன்னடம் என்று பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தமிழில் கடைசியாக தேவராட்டம் என்ற படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். இவர் மலையாள சினிமாவில் அறிமுகமாகி கௌதம் மேனனால் தமிழுக்கு அறிமுகமாகிய நடிகை .
1997 முதல் 2002 வரையில் நிறைய மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் மஞ்சிமா மோகன். இதன்பின் நிவின் பவ்லியுடன் ஒரு வடக்கன் செல்ஃபி படத்தில் நாயகியாக அறிமுகமானார். நடித்த முதல் படமே பெரிய வெற்றி அடைய தெலுங்கு மற்றும் தமிழில் கௌதம் மேனனின் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா மற்றும் அதன் ரீமேக்கான சாஹசம் ஸ்வாஷாக சகிப்போ படத்திலும் நடித்தார்.
இந்த இரு படங்களின் வெற்றி காரணமாக தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வந்தார் மஞ்சிமா. முக்கியமாக தமிழில் ஷத்ரியன், இப்படை வெல்லும் மற்றும் தேவராட்டம் ஆகிய படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் வெற்றி படம் இல்லை என்றாலும் மஞ்சிமா நடிக்கும் படங்களில் தனது பங்கை சிறப்பான முறையில் செய்து நடித்து விட்டார் .
தற்போது மஞ்சிமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜன்னல் ஓரம் நின்று வெயில் முகத்தில் படும் படி ஒரு புகைப்படத்தை எடுத்து அதனை பதிவேற்றி தனது சிந்தையில் தோன்றிய விசயத்தை எழுதியுள்ளார். அதில், ஒவ்வொரு சூரிய நிழலிலும் ஒரு கனவு இருக்கிறது என்று கூறியுள்ளார். கேப்ஷனை படித்த இளைஞர்கள் தங்களின் இதயங்களை கமெண்டுகளில் கொடுத்து வந்தாலும் பலர் இது என்ன கேப்ஷன் என்பது போல கேட்டு உள்ளனர் .
மஞ்சிமா தொடர்ந்து மற்ற மொழி படங்களை விட தமிழ் படங்களிலே நடித்து வருகிறார். தமிழில் அடுத்தாக விஷ்ணு விஷாலுடன் எப்.ஐ.ஆர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜீவாவின் களத்தில் சந்திப்போம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அடுத்ததாக சிபிராஜின் வட்டம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.