Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பழைய ரயில் பெட்டிகளில் குடியிருந்த சிறுமிகளுக்கு மஞ்சு வாரியர் செய்த உதவியை பாருங்க!
பழைய ரயில் பெட்டிகளில் வசித்து வந்த சிறுமிகளுக்கு நடிகை மஞ்சுவாரியர் வீடுகளை கட்டி கொடுத்து உதவியுள்ளார்.
திருவனந்தபுரம்: பழைய ரயில் பெட்டிகளில் வசித்து வந்த சிறுமிகளுக்கு நடிகை மஞ்சுவாரியர் வீடுகளை கட்டி கொடுத்து உதவியுள்ளார். மேலும் தன்னுடைய நிகழ்ச்சிகளையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு சிறுமிகளுக்கு கட்டிக்கொடுத்த வீடுகளின் புதுமனை புகுவிழாவில் அவர் கலந்துகொண்டார்.
கேரளமாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிபேடு என்ற பகுதி உள்ளது. இங்கு உள்ள பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் அர்ச்சனா, ஆதிரா என்ற குழந்தைகள் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள், ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய ரெயில் பெட்டிகளில் பெற்றோருடன் தங்கி இருந்தனர். இந்த விவரம் மஞ்சு வாரியாருக்கு தெரிய வந்தது.
வீடு இல்லாத நிலையிலும் பள்ளிக்கு சென்று படிக்கும் அந்த சிறுமிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார் மஞ்சு. இதற்காக தனது சொந்த செலவில் 5 சென்ட் நிலம் வாங்கி அதில் வீடு கட்டி அந்த சிறுமிகளுக்கு மஞ்சுவாரியார் வழங்கினார்.
மேலும் தனது நிகழ்ச்சிகளை தள்ளி வைத்து விட்டு சிறுமிகளுக்கு வழங்கிய வீட்டின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டு அந்த குடும்பத்தினரை குதூகலிக்க வைத்தார். தனது கணவர் வேறு ஒரு நடிகையை திருமணம் செய்துகொண்டபோது அமைதியாக இருந்து கண்ணியத்தை வெளிப்படுத்திய மஞ்சுவாரியர் தற்போது வீடு இல்லாத சிறுமிகளுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்து தனது உதவும் மனதை வெளிப்படுத்தியுள்ளார்.