Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
35 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகை மனோரமா
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை மனோரமா 35 நாட்கள் கழித்து இன்று வீடு திரும்பினார்.
ஆச்சி என்று திரையுலகினரால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை மனோரமாவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முழங்காலில் வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.
காளஹஸ்தி
காலில் அறுவை சிகிச்சை செய்த பிறகு மனோரமா காளஹஸ்தி கோவிலுக்கு சென்ற இடத்தில் தங்கி இருந்த அறையில் வழுக்கி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மார்ச்
கடந்த மார்ச் மாதம் மூச்சுத்திணறல் காரணமாக மனோரமா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.
மீண்டும்
கடந்த மே மாதம் 28ம் தேதி அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்படவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீரக கோளாறு
மனோரமாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
வீடு திரும்பினார்
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த மனோரமாவின் உடல் நிலை தேறியுள்ளது. இதையடுத்து 35 நாட்கள் கழித்து அவர் இன்று வீடு திரும்பினார்.