தனுஷ் பற்றி சர்ச்சை கருத்து.. பேட்டியை முழுசா பாருங்க.. தேவையில்லாத சர்ச்சை.. நடிகை மான்யா விளக்கம்!
சென்னை: வானத்தை போல சீரியலில் நடித்து தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை மான்யா ஆனந்த். இவர் சில தினங்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். நடிகைகள் சந்திக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி பேசி இருந்தார்.
அதாவது, தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் பேசுகிறேன், தனுஷ் புதுசா ஒரு படத்தை இயக்கப்போகிறார். அதில் நடிப்பீர்களா என்று கேட்டார். அதற்கு கமிட்மென்ட் இருக்கும் என அவர் சொன்னார். உடனே நான் கமிட்மென்ட் செய்ய மாட் டேன் என்று சொன்னதும், தனுஷ் கூப்பிட்டாலும் போக மாட்டியா என்று கேட்டார். அதன் பின் மற்றொரு நம்பரில் இருந்து அந்த நபர் தொடர்பு கொண்டார் என மான்யா ஆனந்த் கூறி இருந்தார். பேட்டியில் அந்த பகுதி மட்டும் வைரல் ஆகி சர்சையாக வெடித்திருக்கும் நிலையில், மான்யா ஆனந்த் விளக்கம் இன்ஸ்டாராகிராமில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மான்யா ஆனந்த் விளக்கம்: முதலில் அந்த பேட்டியை பேட்டியை முழுமையாக பாருங்க. தனுஷ் மேனேஜர் ஸ்ரேயாஸ் பெயரை பயன்படுத்தி பொய்யான ஒரு நபர் அப்படி செய்து இருக்கலாம் என்று தான் கூறி இருக்கிறேன். அந்த போன் நம்பரை தனுஷ் சார் டீமுக்கு அனுப்பி, அது யார் என விளக்கம் கேட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறேன். பேட்டியை முழுவதுமாக பார்க்காமல். இதை பற்றி பொய்யான செய்தியை பரப்பாதீர்கள் என மான்யா ஆனந்த் கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











