Don't Miss!
- News அமெரிக்காவை உலுக்கிய பால்டிமோர் பாலம் விபத்து! மேலும் 2 பேர் சடலமாக மீட்பு! தேடுதல் பணி தீவிரம்
- Finance ஆப்பிரிக்காவில் மாஸ்காட்டும் இந்திய நிறுவனங்கள்..TVS எங்க ஊர் பிராண்ட்-ன்னு சண்டை போடுறாங்கப்பா..!!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Sports ஹர்திக் பாண்டியா செய்த செயல்.. மும்பை இந்தியன்ஸ் தோல்விக்கு காரணமே அதுதான்.. கொதித்த ரசிகர்கள்
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Lifestyle 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கணவருடன் கருத்துவேறுபாடு..விவாகரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை..மத போதகரான பிரபல நடிகை!
சென்னை : மகாலட்சுமி என்ற பெயரோடு நடிப்பில் களமிறங்கிய நடிகை தான் மோகினி. பூனை கண்ணழகி, பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பார்.
Recommended Video
90களில் அனைத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த மோகினி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்துள்ளார்.
பூனை விழியுடன் இளசுகளை வசியம் செய்த மோகினி, கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு தற்போது மதபோதகராக மாறியுள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது.
கமலுக்காக தான் தள்ளி போகிறதா பிக்பாஸ் சீசன் 6? ...குழப்பத்தில் ரசிகர்கள்
ஈரமான ரோஜாவே
"வா வா அன்பே பூஜை ஒன்று..பூஜைக்கேற்ற பூக்கள் இரண்டு" இந்த பாட்டை நிச்சயம் 90ஸ் இளவட்டங்கள் மறந்து இருக்கமாட்டார்கள். ஈரமான ரோஜாவே படத்தில் சாந்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் மோகினி. கல்லூரி காதல், அதன் பிரிவை அழகான சொன்ன படம் என்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அனைத்து பாடல்களும் ஹிட்
இசைஞானி இளையராஜா இசையில் இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்துப்பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை மோகினிக்கு தமிழில் பட வாய்ப்புகள் வந்தன. புதிய மன்னர்கள், நாடோடி பாட்டுக்காரன் போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன. ஆனால், தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுத்தரவில்லை.
திருமணம்
பட வாய்ப்பு குறைந்ததால் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு பரத் என்னும் தொழிலதிபரை கல்யாணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். இந்த தம்பதிக்கு அனிருத்,அத்வத் என இரண்டு மகன் உள்ளனர். இதையடுத்து, மோகினியின் கணவர் சீக்கியம், ஜைனம், பௌத்தம் மற்றும் இஸ்லாம் பற்றி மேலும் படித்தார். ஒரு பைபிளை படித்து கிறிஸ்தவத்தை ஆராய ஆரம்பித்தார்.
கிறிஸ்தவ போதகராக மாறினார்
இதையடுத்து, நடிகை மோகினியும் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறினார். இதையடுத்து, கணவருடன் கருத்து வேறுபாடு விவாகரத்து என மன அழுத்தத்தில் இருந்த மோகினி இப்போது முழு நேர கிறிஸ்தவ போதகராக மாறி, மத பணிகளில் தீவிரமாக இருக்கிறாராம். இப்போது மனத்தில் எந்தவிதமான பாரமும் இல்லாமல் மனம் தெளிவாக இருப்பதாக நடிகை மோகினி கூறியுள்ளார்.
-
சாரி சேஷுண்ணா இப்படி உங்க வீட்டுக்கு வருவேன்னு நினைக்கல.. லொள்ளு சபா இயக்குநர் ராம்பாலா உருக்கம்!
-
அடக்கடவுளே.. 10 லட்சம் இருந்தா காப்பாத்திடலாம்னு சொன்னாங்களே.. கடைசியில் சேஷுவுக்கு யாருமே உதவலையா?
-
லொள்ளு சபா முதல் வடக்குப்பட்டி ராமசாமி வரை.. சேஷுவை கடைசி வரை கைவிடாத சந்தானம்.. ஆனால்?