Don't Miss!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
அந்த படத்தை போலவே இதிலும் மோசம் செய்துவிட்டார்.. இயக்குநர் மீது கடும் கோபத்தில் நம்பர் நடிகை!
சென்னை: தர்பார் படத்தால் இயக்குநர் முருகதாஸ் மீது நடிகை நயன்தாரா கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
Recommended Video
தர்பார் படத்தில் அழகு பதுமையாக காட்சியளிக்கிறார் நயன்தாரா. ஏற்கனவே ரஜினிகாந்த் கூறியிருப்பதை போல இந்தப் படத்தில் நயன்தாராவின் அழகும் கிளாமரும் தூக்கலாகவே உள்ளது.
ரசிகர்கள் வருத்தம்
ஆனால் என்ன.. படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பே இல்லை. சும்மா வந்து செல்கிறார் என நயன்தாராவின் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
படங்கள் தேர்வு
நடிகை நயன்தாரா சமீப காலமாக தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களைதான் ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில் அறம், நானும் ரவுடிதான் உட்பட பல படங்களை தேர்வு செய்து வருகிறார்.
துணை நடிகைகள்
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா, ஏன் இப்படி உப்புச்சப்பே இல்லாத படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். படத்தில் நயன்தாராவை ஒரு ஹீரோயின் போல் பயன்படுத்தவில்லை என்றும் துணை நடிகையாகதான் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
புலம்பும் நடிகை
ரஜினியின் மகளாக நடித்திருக்கும் நிவேதா தாமஸ்க்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் கூட படத்தில் தனக்கு அளிக்கப்படவில்லை என நெருக்கமானவர்களிடம் கூறி புலம்பி வருகிறாராம் நயன்தாரா.
மோசமான முடிவு
ஏற்கனவே கஜினி படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை, தன்னை டம்மியாக பயன்படுத்தினார் என குற்றம்சாட்டினார் நயன்தாரா. மேலும் தனது சினிமா வாழ்க்கையில் தான் எடுத்த மோசமான முடிவு கஜினி படத்தில் நடித்ததுதான் என்றும் பேட்டி ஒன்றில் கூறினார் நயன்தாரா.
நடிகை கோபம்
இந்நிலையில் தர்பார் படத்திலும் தனது கதாப்பாத்திரத்தை முருகதாஸ் வீணாக்கிவிட்டார் என கோபத்தில் உள்ளாராம் நயன்தாரா. இதனைக் கேட்ட ரசிகர்கள், அட போம்மா.. முருகதாஸ் ரஜினிகாந்தை வீணாக்கிவிட்டார் என்று கூறி வருகிறார்கள்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!