Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Technology யாரும் நம்பமாற்றங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தேவைப்பட்டால் கோர்ட்டுக்கும் போவேன்... - 'நய்யாண்டி'யை 'வில்லங்க'மாக்கும் நஸ்ரியா
படத்தின் டைட்டில் நய்யாண்டி என்றாலும், நடப்பதையெல்லாம் பார்த்தால் வில்லங்கம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது.
இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் கதிரேசன் இருவரையும் ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன் எனக் கிளம்பியுள்ளனர் நஸ்ரியாவும் அவர் தந்தையும்.
நய்யாண்டி படம் தொடங்கும்போதே கவர்ச்சிக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம். ஆனால் ஒரு முறை கவர்ச்சியாக ஒரு ஆடை கொடுத்து அணியச் சொன்னாராம் இயக்குநர். உடனே அதை அணிய மறுத்து கேரவனில் போய் உட்கார்ந்து கொண்டாராம், மணிக்கணக்கில். பின்னர் தனுஷ் போய் சமாதானம் செய்து கூட்டி வந்தாராம்.
அடுத்த சில தினங்களில்தான் இந்த தொப்புள் விவகாரம் வந்துவிட்டது.
இந்தக் காட்சியை வேறு ஒரு பெண் மற்றும் தனுஷ் போன்ற தோற்றமுடைய ஒருவரை வைத்து எடுத்துவிட்டு, அதை பாடி டபுள் செய்து, ட்ரைலரில் சேர்த்துவிட்டாராம் சற்குணம். இதைக் கேட்கப் போய்தான் இவ்வளவு வில்லங்கமும் வெடித்தது.
நஸ்ரியாவின் தந்தை இதுபற்றி கேட்டபோது, தன் அரசியல் பின்புலத்தைச் சொல்லி சற்குணம் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் கதிரேசனும் மிரட்டினாராம்.
இதனால் என் சொத்தே போனாலும் கவலையில்லை, உன்னை ஒரு வழி பண்ணுகிறேன் பார் என்று வரிந்து கட்டிக் கொண்டு இப்போது போலீசுக்குப் போயிருக்கிறார்கள்.
"முதலில் சினிமா அமைப்பில் முறைப்படி புகார் தந்தேன். அங்கே எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. அதனால்தான் இந்த மோசடியை எதிர்த்து கமிஷனர் அலுவலகத்துக்குப் போக வேண்டியதாயிற்று. நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளேன்," என்கிறார் நஸ்ரியா.