Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எனக்கு இப்பவே அந்த மாதிரி ஃபீலிங்கா இருக்கே... ஈஸ்வரன் பட நடிகை லொள்ளு !
சென்னை : தமிழ் சினிமாவுக்கு புது வரவாக வந்திருக்கும் நடிகை நிதி அகர்வால் அறிமுகமான ஆரம்பத்திலேயே ஒரே நேரத்தில் 2 படங்கள் வெளியான நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நடிகை குஷ்புவை தொடர்ந்து நிதி அகர்வாலுக்கு தமிழ்நாட்டில் ரசிகர்களால் சிலை வைத்து கொண்டாடப்பட்டது சமீபத்தில் வைரலானது.
பவர்ஸ்டார் பவன்கல்யாண் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நடிகை நிதி அகர்வால் எனக்கு இப்பவே அந்தமாதிரி ஃபீலிங்கா இருக்கு என புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு கூறியுள்ளது வைரலாகி வருகிறது.
தமிழிலும் வாய்ப்புகள்
சிம்புவின் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி என இரண்டு திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிதி அகர்வாலுக்கு ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகி சிறந்த அறிமுகமாக அமைந்தது. ஏற்கனவே இந்தி மற்றும் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை நிதி அகர்வாலுக்கு தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு இருந்து வரும் நிலையில் தமிழிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
கவர்ச்சி அட்டகாசங்கள்
இளம் நடிகையாக இருந்தாலும் கவர்ச்சி காட்டுவதில் முன்னணி நடிகைகளுக்கு கொஞ்சம்கூட சலிக்காமல் தாராளம் காட்டி வரும் இவர் திரைப்படங்களில் க்யூட்டான நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியையும் காட்டி ரசிகர்களுக்கு கிளாமர் குயினாக இருக்க சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் கவர்ச்சி அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பவன் கல்யாண் ஜோடியாக
பாலிவுட்டில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு அதன்பிறகு சூறாவளியாக தென்னிந்தியாவில் அடுத்தடுத்து நடித்து வரும் நிதி அகர்வாலுக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கதவைத் தட்டுகிறது. இந்த வகையில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மகிழ்திருமேனி இணையும் படம் என முக்கியமான இரண்டு படங்களில் நிதி அகர்வால் ஒப்பந்தமாகி உள்ளார்.
சங்கிலி சைஸுக்கு தங்க நகைகளை
இன்னும் ஓரிரு ஆண்டுகளில் முன்னணி இடத்தை மிக எளிதாக எட்டிப்பிடிக்கும் அனைத்து அறிகுறிகளும் நிதி அகர்வால் இடம் தெரிய இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை அதுவமாக எனக்கு வெள்ளிக்கிழமை போல ஃபீலிங்காக உள்ளது என கூறியதோடு கிக் ஏற்றும் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டதோடு கழுத்து நிறைய சங்கிலி சைஸுக்கு தங்க நகைகளை அணிந்துகொண்டு ஜொலிக்கும் நிதி அகர்வாலின் இந்த புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி வருகிறது.