நடிகருடன் காதல்.. திருமணத்திற்கு முன்பே தெரிந்த உண்மை.. நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு!
சென்னை: நிதி அகர்வால் முன்னா மைக்கேல் ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். அதன் பின் தெலுங்கில், அவர் நடித்த சவ்ய சாச்சி திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. தற்போது தமிழ், தெலுங்கில் நடித்து வரும் இவர் ஒரு நடிகரை காதலித்து வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், அந்த காதல் தற்போது பிரேக்கப் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
பளபளக்கும் உடம்பு... பார்த்தவுடன் உச்சு கொட்டவைக்கும் அழகு என ஒட்டுமொத்த அழகுக்கும் சொந்தக்காரியாக இருக்கிறார் நடிகை நிதி அகர்வால். இவர் தமிழில், ரோமியோ ஜூலியட், போகன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த லக்ஷ்மணன் இயக்கத்தில் உருவான பூமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். விவசாயத்தை மையமாக வைத்து உருவான இந்த படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி வைரலானது.

நடிகை நிதி அகர்வால்: அதே போல ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார், இப்படத்தில் சிம்பு உடல் எடை குறைந்து சும்மா ஸ்மார்ட்டாக இருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக தோல்வி என சொல்லப்பட்டாலும், இந்த படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் மாங்கல்யம் தந்துனானே பாடல் ஹிட்டடித்தது. ஈஸ்வரன் படத்தில் சிம்பு, நிதி இணைந்து நடித்த போது இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசு பரவியது.
கலகத்ததலைவன்: ஒரே நேரத்தில் தமிழில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் வெளியாகி நிதி அகர்வாலுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்த நிலையில், இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் சூப்பரான த்ரில்லர் கதையான கலகத்தலைவன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிரேக்கப்: நல்ல திறமையும் அழகும் இருக்கும் நிதி அகர்வால் நடிகர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், சினிமாவில் அவ்வளவாக காட்டாமல் இல்லாமல் ஒப்புக்கு நடித்துக்கொண்டு இருந்தார். அவருக்கு விரைவில் திருமணமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் பற்றி சில விஷயம் தெரியவந்ததால், அந்த காதல் பிரேக்கப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், மன அழுத்தத்தில் இருந்த நிதி அகர்வால், காதலை மூட்டை கட்டிவிட்டு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
படங்களில் கவனம்: நடிகை நிதி அகர்வால் தற்போது, பவன் கல்யாண் நடிப்பில் உருவாகிவரும் ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் கிருஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதே போல, தி ராஜா சாப் என்ற படத்தில், பிரபாஸுக்கு நாயகியாக நடித்த ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் தமிழில் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











