சேலையில் தகதகக்கும் நிதி அகர்வால்... வர்ணிக்கும் ரசிகர்கள்!
சென்னை : சிம்பு தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஈஸ்வரன் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் பொங்கலுக்கு ரிலீசாகிறது.
பூமி திரைப்படத்தை தொடர்ந்து ஈஸ்வரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை நிதி அகர்வால் இப்பொழுது தமிழ் ரசிகர்களின் லேட்டஸ்ட் கனவு நாயகியாக உள்ளார்.
ஈஸ்வரன் பட ஆடியோ லான்ட்ச் வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் பங்கேற்பதற்கு முன்பு நிதி அகர்வால் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது ரசிகர்களின் வர்ணிப்பில் தாறுமாறாக வைரலாகி வருகிறது

தமிழ் சினிமாவையும் கலக்க
கவர்ச்சி சூறாவளியாக இதுவரை ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் சுற்றிக்கொண்டிருந்த நடிகை நிதி அகர்வால் இப்பொழுது தமிழ் சினிமாவையும் ஒரு கலக்கு கலக்க உள்ளார்.

சிம்புவின் பேச்சு
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் கலர்ஃபுல் கமர்சியல் திரைப்படமான ஈஸ்வரன் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து நேற்று ஆடியோ லான்ட்ச் நடத்தப்பட்டு பாடல்களும் வெளியிடப்பட்ட நிலையில் இதில் பல்வேறு விதமான சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தது, குறிப்பாக அதில் சிம்புவின் பேச்சு இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இரண்டு படங்களும் ஒரே நேரத்தில்
ஈஸ்வரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை நிதி அகர்வால் ஏற்கனவே பூமி திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்திருக்க இரண்டு படங்களும் வரும் பொங்கலுக்கு ரிலீசாகிறது. தமிழில் அறிமுகமாகும் போதே இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் அதுவும் பண்டிகை நேரத்தில் வெளியாக நிதி அகர்வாலுக்கு மேலும் மவுசு கூடிப் போயுள்ளது.

குலாப்ஜாமுன் மாதிரி
சாதாரணமாகவே கவர்ச்சி காட்டி சின்னா பின்னமாக்கும் நிதி அகர்வால் நேற்று ஆடியோ லன்ட்ச் விழாவில் கலந்துகொள்ள படுகவர்ச்சியான சேலையில் பார்க்கும் அனைவரையும் திக்குமுக்காட வைக்கும் அளவிற்கு கொள்ளை அழகைக் கொட்டி காட்டியது போல சேலையில் தகதகன்னு குலாப்ஜாமுன் போல வந்திருந்த நிதி அகர்வால் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து இப்பொழுது ரசிகர்களின் வர்ணிப்பில் செம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











