Don't Miss!
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆபாச மெயில் அனுப்பியவனை சும்மா விடக் கூடாது-கொதிக்கும் நிலா!
மீரா சோப்ரா என்ற இயற்பெயரைக் கொண்ட நிலாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அமாவாசை ஆகி விட்டதால் டெல்லியிலேயே செட்டில் ஆகி விட்டார். இந்த நிலையில் அவருக்கு ஆபாச இமெயில்கள் தொடர்ந்து வரவே டெல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நிலா கூறுகையில்,
இந்த ஆபாச இமெயில்களால் நான் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். எனக்குத் தெரிந்தவர்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்பதை நினைக்கும்போது பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
என்னால் வெளியில் போகவே முடியவில்லை. வீட்டோடு முடங்கிப் போய் அழுதபடி இருந்தேன்.
அனுப்பியது யார் என்பது எனக்குத் தெரியும். என் மீது பற்று கொண்டிருப்பதால் இவ்வாறு அனுப்பி விட்டதாக நான் கருதி அமைதியாக இருந்தேன். ஆனால் தொடர்ந்து இந்த ஆபாச மெயில்கள் வந்ததால்தான் போலீஸாரை அணுகினேன்.
இந்த நபரை சும்மா விடக் கூடாது. பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றார் நிலா.