Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
புதிய கருத்து சொன்ன திருச்சிற்றம்பலம் நாயகி.. நல்லாத்தான் இருக்கு!
சென்னை : நடிகர் தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது திருச்சிற்றம்பலம் படம்.
இந்தப் படத்தில் தனுஷிற்கு இணையான நடிப்பை கொடுத்து மிரட்டியிருந்தார் நித்யா மேனன். அவரை நடிப்பு ராட்சசி என்று ரசிகர்கள் புகழ்ந்தனர்.
சமீபத்தில் அவர் ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
என்னது வாய்ஸ் ஓவர் மேனனா? ப்ளூ சட்டை மாறனின் நக்கல் ட்வீட்.. எங்கே போய் முடியப் போகுதோ?
நடிகை நித்யா மேனன்
நடிகை நித்யா மேனன் தென்னிந்திய மொழிப் படங்களில் சிறப்பான நடிகையாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் பின்னணி பாடகியாகவும் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் நூற்றெண்பது படம் மூலம் இவர் என்ட்ரி கொடுதுள்ளார்.
நடிகையாக விருப்பம் இல்லை
தான் எப்போதுமே நடிகையாக விரும்பியது கிடையாது என்று இவர் முன்னதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பத்திரிகையாளராக பணியாற்றும் விருப்பத்துடன் இருந்த இவர் ஒளிப்பதிவாளருக்கான படிப்பை புனே திரைப்படக் கல்லூரியில் முடித்தவர். தொடர்ந்து காலம் இவரை நடிகையாக்கிய போதிலும், அதிலும் சிறப்பாகவே காணப்படுகிறார் நித்யா.
அடுத்தடுத்த படங்கள்
தமிழில் வெப்பம், காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல், இருமுகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நித்யா மேனன். ஆனால் ஓகே கண்மணி படம் இவரை வேறு தளத்தில் ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தியது. இதேபோல விஜய்யுடன் இவர் நடித்திருந்த மெர்சல் படமும் இவரை சிறப்பாக வெளிப்படுத்தியது.
தெலுங்கிலும் சிறப்பு
தெலுங்கிலும் ஓகே கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நித்யா மேனனுக்கு குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய படங்கள் பிலிம்பேர் விருதுகளை பெற்றுத் தந்தது. தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நித்யா மேனன்.
திருச்சிற்றம்பலம் படம்
நீண்ட காலங்களுக்கு பிறகு தமிழில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீசாகி தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு போட்டியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பு ராட்சசி என்ற பெயரை ரசிகர்களிடையே பெற்றுள்ளார் நித்யா மேனன்.
ட்விட்டர் பக்கத்தில் இணைந்த நித்யா மேனன்
சமீபத்தில் இவர் ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், கேப்ஷனில் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் தனது சிறப்பான புகைப்படத்துடன் புதிய கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
புதிய கருத்து + புகைப்படம்
ஒவ்வொரு பின்னடைவும் வெற்றிக்கான வழியாகவே உள்ளது என்று இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டில் இவர் பதிவிட்டுள்ள புகைப்படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. தொடர்ந்து நித்யா மேனன் அடுத்தடுத்த பதிவுகளை பகிர்ந்து வருவதும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.