Don't Miss!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஓவியாவின் திடீர் 'லவ் டிவிட்'.. அவங்களையா சொல்றீங்க.. குழப்பத்தில் ரசிகர்கள்!
சென்னை: ஓவியாவின் திடீர் காதல் டிவிட்டை பார்த்த ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
Recommended Video
மலையாள நடிகையான ஓவியா, தமிழில் களவானி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ஓவியா.
தமிழ் மட்டுமின்றி தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து வருகிறார் ஓவியா.
எஸ்பிபிக்கான கூட்டுப்பிரார்த்தனையில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்.. அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு!
ஓவியா ஆர்மி
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகை ஓவியா. இதில் நேர்மையாக இருந்ததால் ரசிகர்களுக்கு பிடித்தமானவர் ஆனார் ஓவியா. ஓவியாவுக்கு என சமூக வலைதளங்களில் தனி ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு வரவேற்பை பெற்றார்.
தற்கொலை முயற்சி
அப்போது சக போட்டியாளரான ஆரவ் மீது காதல் கொண்டார். ஆனால் ஆரவ், அவரது காதலை ஏற்கவில்லை. மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்த பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் அவரை கார்னர் செய்தனர். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான ஓவியா, அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
நல்ல நண்பர்கள்
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஓவியா. ஆனாலும் அவரை மீண்டும் கொண்டு வரக்கோரி ரசிகர்கள் போராட்டம் நடத்தாத குறையாக கோரிக்கை விடுத்து வந்தனர். பிக்பாஸ் வீட்டில் ஆரவ் ஓவியாவின் காதலை ஏற்காவிட்டாலும் வெளியே வந்த பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.
விலகிபோவதில்லை
இருவரும் வெளிநாடுகளில் சுற்றிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நடிகை ஓவியா, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் நாம் நேசிப்பவர்கள் ஒருபோதும் நம்மைவிட்டு விலகிப்போவதில்லை! அவர்கள் நம் அருகில் நடக்கிறார்கள். பார்த்திருக்கமாட்டோம், கேட்டிருக்கமாட்டோம். ஆனால், எப்போதும் அருகில்தான் இருப்பார்கள்., அதிகம் நேசித்தவர்கள், தவறவிட்டவர்கள், ஆனால் எப்போதும் மிகவும் அன்பானவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அம்மாவைப் பற்றி?
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த டிவிட் யாருக்கானது ஓவியா என நேரடியாகவே கேட்டுள்ளனர். அதே நேரத்தில் சிலர், நீங்கள் சொல்வது உண்மைதான்.. ஆனால் அது நம் பெற்றோருக்கு தான் பொருந்தும் என தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் உங்களின் அம்மாவை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் அவர் எப்போதும் உங்களுடனே இருப்பார் என்றும் கூறியுள்ளனர்.