twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசியக் கொடியை துப்பட்டாவாக அணிந்து கிளாமர் காட்டிய நடிகை.. குவியும் கண்டனம்.. தெறிக்கும் டிவிட்டர்!

    |

    சென்னை: தேசியக் கொடியை துப்பட்டாவாக அணிந்து கிளாமர் காட்டிய அஜித் பட நடிகைக்கு கண்டனங்கள் குவித்து வருகின்றன.

    பாப்பின்ஸ் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.

    என்ன தொப்புள் கொடியில் நெருப்பு வைக்கிறாங்க.. கீர்த்தி பாண்டியனின் கண்ணகி ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!என்ன தொப்புள் கொடியில் நெருப்பு வைக்கிறாங்க.. கீர்த்தி பாண்டியனின் கண்ணகி ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

    தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்த பார்வதி நாயர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

    தமிழ் மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி

    தமிழ் மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி

    தொடர்ந்து கமலின் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மலையாளம் மட்டுமின்றி கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    கலக்கல் போட்டோ ஷுட்

    கலக்கல் போட்டோ ஷுட்

    சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பார்வதி நாயர் மாடர்ன் உடையில் அரைகுறையாக காட்டி கிறங்க வைப்பார். அவ்வப்போது சேலையிலும் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தி கதறவிடுவார்.

    ஈர உடையில் பீச்சில் கிளாமர்

    ஈர உடையில் பீச்சில் கிளாமர்

    அண்மையில் பீச்சில் ஈர உடையுடன் அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தை திணறடித்தது. அந்த வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பு அளவுக்கு எதிர்ப்பும் இருந்தது. காரணம் அந்தளவுக்கு பார்வதி நாயர் அதில் கிளாமர் காட்டியிருந்தார்.

    தொடர்ந்து கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

    மூவர்ண கொடி வண்ணத்தில் துப்பட்டா

    மூவர்ண கொடி வண்ணத்தில் துப்பட்டா

    இந்நிலையில் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்து வாழ்த்து கூறியிருந்தார். வெள்ளை நிற சுடிதார் அணிந்திருந்த பார்வதி நாயர், மூவர்ண கொடி வண்ணத்தில் துப்பட்டா அணிந்திருந்தார்.

    போன வருஷம் போட்ட போட்டோ தானே

    போன வருஷம் போட்ட போட்டோ தானே

    அந்த துப்பட்டாவை பறக்க விட்டு போஸ் கொடுத்திருந்தார் பார்வதி நாயர். பார்வதி நாயரின் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துள்ளனர். நீங்கள் தேசிய கொடியையா காட்டுகிறீர்கள் என்றும் இது போன வருஷம் போட்ட போட்டோ தானே என்றும் விளாசி வருகின்றனர்.

    இப்போது தான் சுதந்திர தாகம் எடுக்கிறது

    இப்போது தான் சுதந்திர தாகம் எடுக்கிறது

    பார்வதி நாயர் ஷேர் செய்த போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன் தனக்கு இப்போதுதான் லைட்டா சுதந்திர தாகம் எடுப்பது போல் இருக்கிறது என கூறியுள்ளார்.

    எதையோ பிடிக்க பார்க்கிறீர்கள் - சிக்க வில்லை

    எதையோ பிடிக்க பார்க்கிறீர்கள் - சிக்க வில்லை

    மற்றொரு ரசிகரான இவர், பார்வதி நாயரின் போஸை பார்த்து எதையோ பிடிக்க பார்க்கிறீர்கள் ஆனால் கையில் சிக்கவில்லை என கலாய்த்துள்ளார்.

    அவமதிக்கும் செயல் - வன்மையாக கண்டிக்கிறேன்

    அவமதிக்கும் செயல் - வன்மையாக கண்டிக்கிறேன்

    பார்வதி நாயரின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், தேசிய கொடியை அவமதிக்கும் செயல்..

    வன்மையாக கண்டிக்கிறேன் என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    நீல நிறம் இல்லை - தேசத் துரோகம்

    நீல நிறம் இல்லை - தேசத் துரோகம்

    பார்வதி நாயர் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், நடுவில் இருக்க வேண்டிய நீல நிறத்தை காணவில்லை.. தேசத்துரோகம் இது என கூறி கிண்டலடித்துள்ளார்.

    English summary
    Actress Parvati Nair photo gets condemns. Netizens trolls her for the photo.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X