Don't Miss!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விமானத்தில் வரம்பு மீறி நடந்து கொண்ட ஊழியர்.. நேரடியாக புகார் அளித்த பூஜா ஹெக்டே!
சென்னை : நடிகை பூஜா ஹெக்டே விமான ஊழியர் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் வாயிலாக சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.
அதன் பின்னர் தெலுங்கு , இந்தி என பிஸியாக இருந்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அதாவது சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.
விக்ரம் படத்தில் ஒரே சீன் தான் - சோஷியல் மீடியாவில் டிரெண்டாகிவிட்ட நடிகை!
பீஸ்ட்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும். வசூல் ரீதியாக படம் இழப்பை ஏற்படுத்தவில்லை. பீஸ்ட் திரைப்படத்திற் பிறகு தமிழில் படவாய்ப்பு வரும் என்று நினைத்த பூஜாவுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
கொஞ்சம் பிஸி
இருப்பினும், பூஜா ஹெக்டே கைவசம் தெலுங்கு மற்றும் இந்தி என சில படங்களை வைத்துள்ளார். இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜன கன மன. விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா ரிலீஸாக இப்படம் வெளியாகவுள்ளது.
வரம்பு மீறி நடந்து கொண்ட ஊழியர்
இந்நிலையில், பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில், தான் மும்பையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணித்ததாகவும், அப்போது அதிலிருந்த விமான ஊழியர் விபுல் நாகேஷ் என்பவர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவரது திமிர் பிடித்த மற்றும் அச்சுறுத்தும் செயல்பாட்டால் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக பதிவிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.
மோசமாக நடந்து கொண்டார்
தான் வழக்கமாக இது போன்ற பதிவுகளை வெளியிடுவதில்லை என்றும், ஆனால், அந்த ஊழியர் தன்னிடம் வெளிப்படுத்திய விதம் மிகவும் மோசமாக இருந்ததால் வேறுவழியின்றி இதை பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த பதிவை இண்டிகோ விமானத்தின் ட்விட்டர் பக்கத்தையும் டாக் செய்து பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார்.