poonam bajwa: கண்ணாடி முன்னாடி நின்னு..இளசுகளின் மனதில் நங்கூரம் போட்ட பூனம் பஜ்வா!
சென்னை: நடிகை பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.
மும்பை மஹாரஷ்டிராவை சேர்ந்தவரான நடிகை பூனம் பஜ்வா 2005 ம் ஆண்டு தெலுங்கில் மொடடி சினிமா என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் என தென்மாநில மொழிகளில் களமிறங்கிய அவர் அங்கு ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்களின் முகமறியப்பட்ட நடிகையாக மாறினார்.
அழுத்தமான கதை: நடிகை பூனம் பஜ்வா 2008 ம் ஆண்டு சேவல் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் பரத்திற்கு கதாநாயகியாக நடித்த பூனம் பஜ்வாவிற்கு முதல் படமே அழுத்தமான கதையாக அமைந்தது. அந்த படத்தை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் நடித்தார். கச்சேரி ஆரம்படம் படத்தில் இடம் பெற்ற கச்சேரி கச்சேரி களை கட்டுதடி பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இருந்தாலும், இவருக்கு படவாய்ப்பு சரியாக அமையவில்லை.
கவர்ச்சிக்கு மாறினார்: 2011ல் மலையாளத்திற்கு சென்றும், அங்கும் பெயர் சொல்லும் நடிகையாக மாறமுடியவில்லை. ஆனாலும் மலையாளம், கன்னடம் என இரு மொழிகளில் ஓரிரு படங்களில் நடித்து வந்தார். இதனிடையே புது நடிகைகளின் வரவால் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போக கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பினார். இதையடுத்து சுந்தர் சிக்கு ஜோடியாக முத்துனகத்திரிக்காய் அரண்மனை போன்ற படத்தில் கவர்ச்சியாக நடித்தார்.
இளசுகள் மனதில் நங்கூரம் போல: தற்போது இவருக்கு படவாய்ப்பு இல்லாததால், படவாய்ப்பை பெற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அதீத கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் கண்ணாடி முன் நிற்று கொண்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பேன்ஸ் நங்கூரம் போல மனதில் பதிந்து விட்டாய் என பூனம் பஜ்வாவை வர்ணித்து வருகின்றனர். இந்த போட்டோவை பதிவிட்ட சில மணி நேரத்திலேயே லைக்குகளை மலைபோல் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











