Don't Miss!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
2 டோஸ் போட்டும் வந்துருச்சே... இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை!
சென்னை: இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டும் பிரபல நடிகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால். மாடலாகவும் வலம் வருகிறார்.
பிக் பாஸின் விளையாட்டு ஆரம்பம்.. சீசன் 4 டைட்டில் வின்னர்.. என்ன சொல்லியிருக்காருனு பாருங்க!
தெலுங்கு மற்றும் தமிழ், இந்தி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார் பிரக்யா ஜெய்ஸ்வால்.
முன்னணி நடிகர்களுடன்
தமிழில் 2014ஆம் ஆண்டு வெளியான விரட்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் அதே ஆண்டு அறிமுகமானார் பிரக்யா ஜெய்ஸ்வால். சுதீப் கிஷன், வருண் தேஜ், மஞ்சு மனோஜ் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார்.
பாலிவுட்டிலும் பிஸி
குருஷேத்ரா என்ற படத்தின் மூலம் கன்னட படத்திலும் அறிமுகமாகியுள்ளார் பிரக்யா ஜெய்ஸ்வால். தற்போது அகன்டா என்ற தெலுங்கு படத்திலும் அன்டிம்; தி ஃபைனல் ட்ரூத் என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு
இந்நிலையில் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார் பிரக்யா ஜெய்ஸ்வால்.
இரண்டு டோஸ் தடுப்பூசி
இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் நடிகை பிரக்யா. இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் பிரக்யா ஜெய்ஸ்வால்.
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும்
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பிரக்யா ஜெய்ஸ்வால் பதிவிட்டிருப்பதாவது, "எனக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். தற்போது மருத்துவர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கடந்த 10 நாட்களில் என்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.