கல்யாணமானதை மறந்துட்டாங்க போல..நடிகை பிரணிதாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை பிரணிதா சுபாஷ், பிகினில் விதவிதமான போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார் நடிகை பிரணிதா சுபாஷ்,
பெங்களூருவை சேர்ந்த பிரணிதா தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

பிரணிதா சுபாஷ்
போக்கிரி படத்தின் கன்னட ரீமேக்கான பொறுக்கி படத்தின் மூலம் கடந்த 2010ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானவர் பிரணிதா. உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் கார்த்தி உடன் சகுனி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். 2015ம் ஆண்டு சூர்யாவின் மாஸ் என்கிற மாசிலமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தார். ஆனால், இந்த படங்கள் சுமாராக ஓடின.

பெண் குழந்தை
கடந்த ஆண்டு புஜ் எனும் பாலிவுட் படத்தில் நடித்த பிரணிதா, தற்போது ராமண அவதாரா படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, கடந்த ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இதையடுத்து, தனது கணவரின் பிறந்த நாளில் தான் அம்மாவாகப்போகும் போகும் மகிழ்ச்சியான தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். அவருக்கு ஜூலை 10ஆம் தேதி இவருக்கு பெண் குழந்தை பிறந்த. தனது குழந்தைக்கு அர்ணா என பெயர் வைத்துள்ளார்.

அதற்குள் இது தேவையா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். அதில், கவர்ச்சி சற்று தூக்கலாகவே உள்ளது. பச்சை நிற கோட்டை போட்டுக்கொண்டு, காலழகு மொத்தத்தையும் தெறியவிட்டு போஸ் கொடுத்திருந்தார். இதனால்,கடுப்பான ரசிகர்கள் பிறந்த குழந்தையைவிட்டு போட்டோஷூட் எடுக்கவந்துட்டீங்க என்றும், குழந்தையுடன் இருங்கள் என்றும் அவருக்கு அட்வைஸ் கொடுத்தனர்.

மறந்துட்டீங்களா?
தற்போது மாலத்தீவில் கடற்கரையில் அமர்ந்து கொண்டு காலை உணவை சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு ஸ்பெஷலாக மாலத்தீவு போய்ட்டு பிகினியில் போட்டோ எடுக்கலனா எப்படி என பிகினியில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ், இந்த நடிகை கல்யாணம் ஆனதையும்,குழந்தை பிறந்ததையும் மறந்துட்டாங்க போல என கிண்டலாக கேட்டுவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











