Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
குட்டைப் பாவாடையில் கதிகலங்க வைத்த பிரியாமணி.. கண் குளிர ஒரு போட்டோஷூட்!
சென்னை : பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்று சிறந்த நடிகையாக வெற்றி வலம் வந்தவர் நடிகை பிரியாமணி.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்து வரும் இவர் இப்போது ஹிந்தியில் நடிகர் அஜய் தேவ்கான் உடன் இணைந்து மைதான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தற்போது இவர், விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கிளுகிளுக்க வைத்து வரும் பிரியாமணி இப்பொழுது கூலாக குட்டைப் பாவாடையில் குளுகுளுன்னு எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை மெய்மறக்க வைத்துள்ளது.
பல மொழிகளில்
தமிழில் வெற்றி நடிகையாக வலம் வந்த நடிகை பிரியாமணி தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தேசிய விருது
பல மொழிகளில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள பிரியாமணி தமிழில் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்ததோடு தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுத்தந்தது.
ஹீரோயின் கதாபாத்திரம்
மதுரை மண் வாசனையுடன் எதார்த்தமான கதைக்களத்தை கொண்டு உருவான பருத்தி வீரன் திரைப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய நிலையில் அந்த படத்திற்கு பிறகு இந்திய அளவில் பலராலும் உற்று நோக்கப்படும் நடிகையாக வலம் வந்தார்.
இரண்டு வேடங்களில்
மனதை உருக வைக்கும் சென்டிமென்ட் காட்சிகள், கண்களை குளிர வைக்கும் கவர்ச்சி என எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தனது இயல்பான நடிப்பின் மூலம் வெளுத்துக் கட்டும் பிரியாமணி தமிழில் கடைசியாக சாருலதா என்ற திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து அனைவரையும் வியக்க வைத்து பலரின் பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.
கண் குளிர
இந்நிலையில் அவ்வப்போது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் பல போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பிரியாமணி இப்பொழுது முட்டி தெரிய குட்டைப் பாவாடை அணிந்து கொண்டும், கையில் குடை வைத்துக்கொண்டு பார்ப்பவர்களின் கண்களை குளிர்விக்கும் வகையில் வெளியிட்டிருக்கும் கவர்ச்சியான புகைப்படங்கள் அனைவரையும் சொக்க வைத்துள்ளது.