அது சட்டையா… ஜாக்கெட்டா… பிரியா மணியின் வித்தியாசமான காஸ்ட்யூம்… குழம்பிய ரசிகாஸ் !
சென்னை : சமூகவலைத்தளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா மணி வித்தியாசமான உடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்டஆறு மொழிகளில்பிசியாக வலம் வருபவர் பிரியாமணி.
கண்களால்கைது செய் திரைப்படத்தின்மூலம் கதாநாயகியாகஅறிமுகமானார்.

தேசிய விருது
இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் படத்தின் மூலம் தேசிய விருது பெற்று இந்திய அளவில் கவனம் பெற்றவர் பிரியாமணி. இவர் ஒரு கனாக்காலம்,மலைக்கோட்டை,தோட்டா, ஆறுமும், நினைத்தாலே இனிக்கும், சாருலதா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

நாராப்பா
தேசிய விருதுக்குப்பிறகு பிறகு பல படங்களில் நடித்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு எந்த படங்களும் பெயர் சொல்லவில்லை. இதனால், பிற மொழி படங்களில் அவர் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இவர் தேசிய விருது பெற்ற அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாராப்பா படத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பிரியா மணி பிக்ஸ்
திரைப்படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர் அண்மைக்காலமாக படு கவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். தமிழில் இவருக்கு படங்கள் இல்லாததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.
Recommended Video

சட்டையா… ஜாக்கெட்டா
தற்போது இவர், சட்டையா இல்ல அது ஜாக்கெட்டா என்று ரசிகர்களே குழம்பும் அளவுக்கு இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சட்டையை அணிந்து சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கும் ரசிகர்கள் தங்களை இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











