twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ரேப் சென்டிமென்ட்'-கோபத்தில் பிரியா மணி!

    By Sudha
    |

    Priyamani
    தன்னை வைத்து கோலிவுட்டில் தற்போது பேசப்பட்டு வரும் ஒரு 'ராசி' குறித்து பிரியா மணி கடும் கோபமடைந்துள்ளார். இப்படியெல்லாமா ஒரு நடிகை குறித்துப் பேசுவது என்று கடும் அதிருப்தியும் அடைந்துள்ளார்.

    அது வேறு ஒன்றும் இல்லை, பிரியா மணிக்கும், கற்பழிப்புக் காட்சிக்கும் செம பொருத்தம் என்று சினிமாக்காரர்களிலேயே சிலர் பேசி வருகிறார்களாம்.

    பருத்தி வீரன் படத்தில் பலர் சேர்ந்து கற்பழிப்பது போன்ற காட்சியில் நடித்திருந்தார் பிரியா மணி. அந்தக் காட்சியை அமீரும் மிகக் கோரமாக காட்டியிருந்தார். இந்தக் காட்சி நிறையவே பேசப்பட்டது.

    தற்போது சமீபத்தில் வெளியான ராவணன் படத்திலும் பிரியா மணி பல போலீஸ்காரர்கள் சேர்நது கற்பழிப்பது போன்ற காட்சியை வைத்திருந்தார் மணிரத்தினம். இந்தக் காட்சியும் பேசப்பட்டது.

    இதையடுத்து பிரியா மணிக்கு கற்பழிப்புக் காட்சிகள் நல்ல பொருத்தமாக உள்ளதாக கோலிவுட்டில் பேச ஆரம்பித்து விட்டனராம்.

    இதுவைர மதர் சென்டிமென்ட், சிஸ்டர் சென்டிமென்ட், வில்லேஜ் சென்டிமென்ட் என்று பேசி வந்தவர்கள் புதிதாக அதில் கற்பழிப்பு சென்டிமென்ட்டையும் சேர்த்துள்ளனர்.

    இது பிரியா மணி காதுக்குப் போக அவர் அப்செட்டாகி விட்டாராம். இப்படியெல்லாம் கூடவா பேசுவார்கள் என்று அவர் பொறுமியதாக கூறுகிறார்கள்.

    இந்த நிலையில் பிரியா மணி ராவணன் படத்தை முடித்த கையோடு மலையாளத்துக்குப் போகிறார்.அங்கு மம்முட்டியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். ரஞ்சித் இயக்குகிறார். பிரஞ்சியேட்டன் மற்றும் ஒரு சாமியார் என்ற தலைப்பிலான படம் இது. காமெடிப் படமாம்.

    கற்பழிப்பு சென்டிமென்ட் பேச்சை மறைக்க இந்த காமெடிப் படம் பிரியாவுக்குக் கை கொடுக்கட்டும்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X