Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கேள்வி கேட்ட நிருபரை பளார் என அறைந்த பிரியா மணி...!
ஹைதராபாத்: ஏன் அயிட்டம் பாடல்களில் தொடர்ந்து ஆடுகிறீர்கள்? என்று கேட்ட தெலுங்கு நிருபரை நடிகை பிரியாமணி ஓங்கி கன்னத்தில் அறைந்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த விவகாரம் தற்போது தெலுங்குத் திரையுலகில் மாபெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழில் உள்ளம் என்னும் படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை பிரியாமணி, இயக்குநர் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானார்.
நடிகர் கார்த்தியுடன் இவர் இணைந்து நடித்த பருத்திவீரன் திரைப்படம் பிரியாமணிக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பிரியாமணிக்கு சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் எதுவும் இல்லை.
இதனால் கூடிய விரைவில் திருமணம் செய்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறார் பிரியாமணி. இந்நிலையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு செய்தியாளர் பிரியாமணியிடம் ஏன் ஐட்டம் பாடலில் எல்லாம் ஆடுகிறீர்கள், திரையில் தோன்றுவதற்காக இந்தப் பாடலை ஓகே என சொல்லிவிட்டீர்களா? எனக் கேட்க இதில் எரிச்சல் அடைந்த பிரியாமணி அவரை அடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஒரு கேள்வியைக் கேட்கும் முன் யோசித்து கேளுங்கள் என கூறியதாகவும் சொல்லப்படுகிறது.இது தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்சமயம் இரு கன்னடப் படங்களில் நடித்து வரும் பிரியாமணி தெலுங்கில் இயக்குநர் திரிவிக்ரமின் பன்னி படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு ஆடவிருக்கிறார். இதைக் கேட்கப்போய்த்தான் தெலுங்கு செய்தியாளர் அடி வாங்கினாராம்.
பிரியாமணி இவ்வளவு கோபக்காரரா? தெரியாமப் போச்சே...