Don't Miss!
- News என்னது 60 சதவீதமா?அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை.. ஆனால்.. கோவையில் விளாசிய கனிமொழி!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
மும்பை தொழிலதிபரை மணந்தார் நடிகை ப்ரியாமணி!
பெங்களூரு: பிரபல நடிகை ப்ரியாமணிக்கும் மும்பை தொழிலதிபருக்கும் நேற்று பெங்களூரில் திருமணம் நடந்தது.
தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகி ப்ரியாமணி. 2004-ம் ஆண்டு பாரதிராஜாவின் 'கண்களால் கைது செய்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். 'பருத்திவீரன்' படத்தில் நடித்ததன் மூலம், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த ப்ரியாமணிக்கு இப்போது 33 வயதாகிறது. இடையில் ப்ரியாமணிக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஒரு வருடமாக ரகசியமாக காதலித்து வந்தார்கள்.
பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.
ப்ரியாமணி-முஸ்தபா ராஜ் திருமணம் பெங்களூருவில் நேற்று எளிய முறையில் நடந்தது. சிவாஜி நகரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று இருவரும் மாலை மாற்றி பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் மட்டுமே இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதில் திரையுலகினர் பலரும் பங்கேற்கிறார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று ப்ரியாமணி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.