ராய் லட்சுமி மடியில் சமர்த்தாக படுத்து பால் குடித்த புலி!
சென்னை: அவ்வப்போது எதாவது செய்து மற்றவர்கள் தன்னைப் பற்றி பரபரப்பாக பேசும்படி செய்து விடும் நடிகை ராய் லட்சுமி சமீபத்தில் எல்லாரும் வியக்கும் வண்ணம் மீண்டும் ஒரு செயலை செய்து இருக்கிறார்.
கற்க கசடற என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் அறிமுகமான நடிகை ராய் லட்சுமி மங்காத்தா, காஞ்சனா , அரண்மனை போன்ற வெற்றி படங்களில் நடித்து கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.

தற்போது கோடை விடுமுறையைக் கழிக்க தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றிருக்கும் இவர் அங்குள்ள மிருகக் காட்சி சாலைக்கு சென்று உயிருடன் இருந்த ஒரு புலியை மடியில் தூக்கி வைத்து அதற்கு புட்டிப் பால் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்.
இது குறித்து தத்துவம் ஒன்றும் அவர் வாயில் இருந்து உதிர்க்கப்பட்டிருக்கிறது அதாவது புலிக்கு பால் கொடுக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறி உள்ளது, எனது வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் இதுவும் ஒன்று என்று கூறி இருக்கிறார்.
இன்னொரு முறை சொல்லுங்க!


Click it and Unblock the Notifications











