Don't Miss!
- News பாதி பாலத்தை காணோம்.. சென்னையில் இனி அந்த சைடு கூட போகாதீங்க சார்.. பரபரக்கும் இடிப்பு பணி
- Technology விஸ்வரூப பட்ஜெட்.. ரூ.12999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்னென்ன?
- Sports சிஎஸ்கேக்கு புதிய சிக்கல்.. மே மாதம் முழுவதும் விலகும் ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர்.. பெரும் பின்னடைவு!
- Finance ஈஸியா ரூ.5 லட்சம் உங்களை தேடி வரும்.. மத்திய அரசின் சூப்பரா திட்டம்.. அதுவும் அந்த சலுகை செம!
- Automobiles இந்தியாவுலேயே நல்லா சேல்ஸ் ஆகுற கார் இதெல்லாம்! ஆனா இந்த விஷயம் தெரிஞ்சா யாரும் வாங்க மாட்டாங்க!
- Travel இந்தியாவில் உள்ள பழத் தலைநகரங்கள் பற்றி தெரியுமா – மாம்பழ, வாழைப்பழ, கொய்யா தலைநகரங்கள்!
- Education காரக்பூர் ஐஐடி-யில் செயற்கை நுண்ணறிவு படிப்பு படிக்க ஆசையா...!!
கணவரை பிரிந்த ரச்சித்தாவிற்கு இரண்டாம் திருமணமா?.. அதுவும் அந்த இயக்குநருடனா?
சென்னை : கணவரை பிரிந்த சீரியல் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
மேலும் அந்த தொடரே அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அதன்பிறகு 2013ம் ஆண்டு சரவணன் மீனாட்சி 2வில் நடித்திருந்தார். அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றார்.
ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போ ஆரம்பம்.. செல்வராகவன் சொன்ன அசத்தல் அப்டேட்.. அப்போ ஹாட்ரிக்கா?
நடிகை ரச்சிதா மகாலட்சுமி
பெங்களுரைத் சேர்ந்த நடிகை ரச்சித்தா பார்ப்பதற்கு மாநிறமாக இருந்தாலும் இவரது அழகாலும் திறமையான நடிப்பாலும் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். கன்னடம், தெலுங்கு சீரியலில் நடித்து அனைவரும் பரீச்சியம் ஆனார். நடிகை ரச்சிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் நடித்தார்
இவர்களது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ஜீ தொலைக்காட்சியில் நாச்சியார் என்ற சீரியலில் நடித்தார். ஆனால், அந்த சீரியல் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது, கலர்ஸ் தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும், இது சொல்ல மறந்த கதை சீரியலில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும், விதவைப் பெண்ணாக நடித்து வருகிறார்.
கணவரை பிரிந்தார்
ரச்சித்தா கணவனை விட்டு பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில், பேட்டி அளித்த ரச்சித்தா, இது சொல்ல மறந்த கதை சீரியலில் வரும் கதாபாத்திரமும் தனது வாழ்க்கையும் ஒன்று என்றும், தான் தற்போது தனிமையில் இருப்பதாகவும், கதாபாத்திரத்தில் அந்த பெண்ணுக்கு இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலை சமாளிக்கும் முதிர்ச்சியும் தனக்கு இருப்பதாக ரச்சிதா கூறியிருந்தார். இந்த பேட்டிக்கு பின்பே அவர் உண்மையில் கணவரை பிரிந்து இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
இரண்டாவது திருமணமா?
இதையடுத்து, தற்போது நடிகை ரச்சித்தா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஒரு செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இவர்களுடைய திருமண வாழ்க்கை விவாகரத்து வரை சென்று விட்டதாகவும், ரச்சித்தா விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அவர் ஒரு இயக்குநர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், யார் அந்த இயக்குநர் என்ற தகவல் தெரியவில்லை.