Don't Miss!
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜோக்காக கூட இதை செய்யாதீங்க.. முன்னாள் கனவுக்கன்னி ரம்பா அட்வைஸ்!
சென்னை : நடிகை ரம்பா 90களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர். தன்னுடைய தொடையழகால் ரசிகர்களை கட்டிப் போட்டவர்.
தற்போது திருமணம் முடிந்து தொழிலதிபராக ஜொலித்து வருகிறார். சமீபத்தில் மீனாவின் வீட்டில் இவரை காண முடிந்தது.
இதனிடையே நீண்ட காலங்களுக்கு பிறகு சமூக வலைதளங்களிலும் இவரை தற்போது காண முடிகிறது.
கவர்ச்சி போய் தொழிலதிபராக கெத்து காட்டும் நடிகை ரம்பா: லைக்ஸை அள்ளும் ரம்பாவின் இன்ஸ்டா போஸ்ட்
90களின் கனவுக்கன்னி
நடிகை ரம்பா, 90களில் ரசிக்களின் கனவுக்கன்னியாக இருந்தவர். உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட படங்களில் இவரது தொடையழகை காட்டி ரசிகர்களை கட்டிப் போட்டவர் ரம்பா. உழவன் படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ரம்பாவிற்கு சுந்தர் சியின் உள்ளத்தை அள்ளித்தா படம்தான் சிறப்பாக கைக்கொடுத்தது.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி
தொடர்ந்து விஜய், அஜித், பிரபுதேவா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ரம்பா, 2010ம் ஆண்டில் காதல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை இவர்கள் சென்றனர்.
விவாகரத்து சர்ச்சை
ஆனால் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக அறிவித்த நிலையில், இந்த வழக்கு வாபஸ் ஆனது. இதனிடையே சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படும் ரம்பா, அடுத்தடுத்த பதிவுகளை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் நடிகை மீனாவின் துயரத்தில் பங்கேற்கும் வகையில் அவரது வீட்டிற்கு சென்றிருந்தார் ரம்பா.
தொழிலதிபர் ரம்பா
இவருக்கு சென்னையில் ஒரு பேக்டரி உள்ள நிலையில், சமீபத்தில் அங்கு தன்னுடைய குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். கனவு நாயகியாகவும், குடும்பத்தலைவியாகவும் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாகவும், தொழிலதிபராகவும் காணப்படுகிறார் ரம்பா.
நெகட்டிவ்வாக பேசாதீர்கள்
இதனிடையே சமீபத்தில் இவரது பதிவில், நெகட்டிவ்வாக பேசாதீர்கள் என்று ரசிகர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார். ஜோக்காக கூட இதை செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். உங்களுடைய உடல் இதற்கான வித்தியாசத்தை அறியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
வாழ்க்கை சிறப்பாக மாறும்
தொடர்ந்து பேசிய அவர், நாம் பேசும் வார்த்தைகளை பாசிட்டிவ்வாக மாற்றிக் கொண்டால் நம்முடைய வாழ்க்கையும் சிறப்பாக மாறும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் அழகான ரம்பாவை காண முடிகிறது. மேலும் நெகட்டிவிட்டியை பரப்பாதீர்கள் என்றும் அவர் கேப்ஷனில் கேட்டுக் கொண்டுள்ளார்.