Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழக மக்களை முட்டாள் என்று மன்னார்குடி மாபியா நினைக்கிறதா?: நடிகை ரஞ்சனி
திருவனந்தபுரம்: தமிழக மக்களை முட்டாள் என்று மன்னார்குடி மாபியா நினைக்கிறதா? இந்த அராஜகத்தை எதிர்த்து குரல் கொடுக்குமாறு தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகை ரஞ்சனி ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்கள் சசிகலாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகை ரஞ்சனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சசிகலா பற்றி கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு
தமிழ்நாட்டு மக்களுக்காக நான் குரல் கொடுக்கிறேன். அது எப்படி சசிகலாவை போய் முதல்வராக ஏற்பது? அம்மாவின் பணிப்பெண் என்பதை தவிர சசிகலாவுக்கு என்ன தகுதி உள்ளது...
மன்னார்குடி மாபியா
தமிழக மக்களை முட்டாள் என்று மன்னார்குடி மாபியா நினைக்கிறதா? இந்த அராஜகத்தை எதிர்த்து குரல் கொடுக்குமாறு தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு விஷயத்தில் இளைஞர்களின் சக்தியை உலகம் பார்த்துள்ளது.
முட்டாள்தனம்
தற்போது இந்த முட்டாள்தனத்தை மக்கள் சக்தி தூக்கி எறிவதை பார்க்க விரும்புகிறேன். அதிமுகவை நடிகரும், முதல்வருமான மறைந்த எம்.ஜி.ஆர். துவங்கினார். அவர் இறந்த பிறகு அன்புக்குரிய அம்மா அவர்கள் பொறுப்பேற்றார்கள்.
சசிகலா
கிரிமினல் சசிகலா முதல்வராவதை தமிழ் மக்கள் தயவு செய்து தடுத்து, அதிமுகவை காப்பாற்ற வேண்டும். முக்கிய பதவிக்கு வருபவர்களுக்கு நல்ல தகுதி மற்றும் அனுபவம் இருக்க வேண்டும். முதல்வராக இன்னும் அதிகமாக தேவை...அம்மாவின் கடைசி நாட்களின்போது அனைவரையும் சசிகலா எப்படி தடுத்தார் என்பதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
கடவுள்
தமிழகத்தை கடவுள் காக்க வேண்டும். இந்த ஆட்சி கவிழ்ப்பு குறித்து ஜனாபதி பிரணாப் முகர்ஜி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன் என ரஞ்சனி தெரிவித்துள்ளார்.