Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழக மக்களை முட்டாள் என்று மன்னார்குடி மாபியா நினைக்கிறதா?: நடிகை ரஞ்சனி
திருவனந்தபுரம்: தமிழக மக்களை முட்டாள் என்று மன்னார்குடி மாபியா நினைக்கிறதா? இந்த அராஜகத்தை எதிர்த்து குரல் கொடுக்குமாறு தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகை ரஞ்சனி ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்கள் சசிகலாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகை ரஞ்சனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சசிகலா பற்றி கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு
தமிழ்நாட்டு மக்களுக்காக நான் குரல் கொடுக்கிறேன். அது எப்படி சசிகலாவை போய் முதல்வராக ஏற்பது? அம்மாவின் பணிப்பெண் என்பதை தவிர சசிகலாவுக்கு என்ன தகுதி உள்ளது...
மன்னார்குடி மாபியா
தமிழக மக்களை முட்டாள் என்று மன்னார்குடி மாபியா நினைக்கிறதா? இந்த அராஜகத்தை எதிர்த்து குரல் கொடுக்குமாறு தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு விஷயத்தில் இளைஞர்களின் சக்தியை உலகம் பார்த்துள்ளது.
முட்டாள்தனம்
தற்போது இந்த முட்டாள்தனத்தை மக்கள் சக்தி தூக்கி எறிவதை பார்க்க விரும்புகிறேன். அதிமுகவை நடிகரும், முதல்வருமான மறைந்த எம்.ஜி.ஆர். துவங்கினார். அவர் இறந்த பிறகு அன்புக்குரிய அம்மா அவர்கள் பொறுப்பேற்றார்கள்.
சசிகலா
கிரிமினல் சசிகலா முதல்வராவதை தமிழ் மக்கள் தயவு செய்து தடுத்து, அதிமுகவை காப்பாற்ற வேண்டும். முக்கிய பதவிக்கு வருபவர்களுக்கு நல்ல தகுதி மற்றும் அனுபவம் இருக்க வேண்டும். முதல்வராக இன்னும் அதிகமாக தேவை...அம்மாவின் கடைசி நாட்களின்போது அனைவரையும் சசிகலா எப்படி தடுத்தார் என்பதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
கடவுள்
தமிழகத்தை கடவுள் காக்க வேண்டும். இந்த ஆட்சி கவிழ்ப்பு குறித்து ஜனாபதி பிரணாப் முகர்ஜி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன் என ரஞ்சனி தெரிவித்துள்ளார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!