Don't Miss!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே, ராஷ்மிகாவுக்கு ரூ.250 கோடி சொத்து? பரபரக்கும் தகவல்
Recommended Video
பெங்களூரு: நடிகை நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே ரூ.250 கோடிக்கு சொத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார்.
இது சூப்பர் ஹிட்டானதையடுத்து பிசியானார். பின்னர் டியர் காம்ரேட் படம் மூலம் தமிழுக்கும் வந்தார்.
சுல்தான் ஹீரோயின்
மகேஷ்பாபுவுடன் இவர் நடித்துள்ள சைலேரு நீக்கெவ்வரு என்ற தெலுங்கு படம் கடந்த 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இவர், தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்துவருகிறார். இதை சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.
அதிரடி சோதனை
இவரது வீடு கர்நாடக மாநிலம் குடகுவில் உள்ள விராஜ்பேட்டில் உள்ளது. இங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர். வீட்டில் இருந்த நகைகள், பணம், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர்.
கணக்கில் வராத பணம்
சோதனை நடந்தபோது, நடிகை ரஷ்மிகா வீட்டில் இல்லை. அவர் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தார். விசாரணையில், ரஷ்மிகா விளம்பர நிறுவனம் நடத்தி வருவதும், பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பதும் தெரியவந்துள்ளது. கணக்கில் வராத பணம் வீட்டில் இருந்தது என்றும் அதை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் செய்தி வெளியாயின.
ஆவணங்கள் சமர்ப்பிப்பு
விராஜ்பேட்டையில் ரஷ்மிகாவுக்கு சொந்தமான திருமண மண்டபத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். அதன்படி பெங்களூரில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு தனது தந்தை மதன் மற்றும் ஆடிட்டருடன் திங்கட்கிழமை சென்ற ராஷ்மிகா, தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்தார்.
ரூ.250 கோடி சொத்து
இந்நிலையில், ராஷ்மிகா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவருக்கு ரூ.250 கோடி சொத்து இருப்பது தெரியவந்துள்ளதாகவும் குறுகிய காலத்தில் இத்தனை கோடி சொத்துகள் வந்தது எப்படி என்பது பற்றி அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்த உள்ளதாகவும் கன்னட மீடியாவில் செய்திகள் வெளியாகியுள்ளது.