Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே, ராஷ்மிகாவுக்கு ரூ.250 கோடி சொத்து? பரபரக்கும் தகவல்
Recommended Video
பெங்களூரு: நடிகை நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே ரூ.250 கோடிக்கு சொத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார்.
இது சூப்பர் ஹிட்டானதையடுத்து பிசியானார். பின்னர் டியர் காம்ரேட் படம் மூலம் தமிழுக்கும் வந்தார்.
சுல்தான் ஹீரோயின்
மகேஷ்பாபுவுடன் இவர் நடித்துள்ள சைலேரு நீக்கெவ்வரு என்ற தெலுங்கு படம் கடந்த 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இவர், தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்துவருகிறார். இதை சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.
அதிரடி சோதனை
இவரது வீடு கர்நாடக மாநிலம் குடகுவில் உள்ள விராஜ்பேட்டில் உள்ளது. இங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர். வீட்டில் இருந்த நகைகள், பணம், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர்.
கணக்கில் வராத பணம்
சோதனை நடந்தபோது, நடிகை ரஷ்மிகா வீட்டில் இல்லை. அவர் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தார். விசாரணையில், ரஷ்மிகா விளம்பர நிறுவனம் நடத்தி வருவதும், பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பதும் தெரியவந்துள்ளது. கணக்கில் வராத பணம் வீட்டில் இருந்தது என்றும் அதை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் செய்தி வெளியாயின.
ஆவணங்கள் சமர்ப்பிப்பு
விராஜ்பேட்டையில் ரஷ்மிகாவுக்கு சொந்தமான திருமண மண்டபத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். அதன்படி பெங்களூரில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு தனது தந்தை மதன் மற்றும் ஆடிட்டருடன் திங்கட்கிழமை சென்ற ராஷ்மிகா, தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்தார்.
ரூ.250 கோடி சொத்து
இந்நிலையில், ராஷ்மிகா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவருக்கு ரூ.250 கோடி சொத்து இருப்பது தெரியவந்துள்ளதாகவும் குறுகிய காலத்தில் இத்தனை கோடி சொத்துகள் வந்தது எப்படி என்பது பற்றி அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்த உள்ளதாகவும் கன்னட மீடியாவில் செய்திகள் வெளியாகியுள்ளது.