Rashmika: நேஷனல் கிரஷ் பட்டமெல்லாம் உதவாது.. அதுல கரெக்டா இருக்கனும்.. ராஷ்மிகா சொன்னத பாத்தீங்களா!
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா நேஷனல் கிரஷ்ஷாக இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 1000 கோடி கிளப் படமானது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ராஷ்மிகா. அடுத்ததாக நடிகர் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா நடித்துள்ள குபேரா படம் ரிலீசாகவுள்ளது. முன்னதாக தமிழில் சுல்தான், வாரிசு படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா, அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா: நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். இவரது கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், பீஷ்மா, சீதா ராமம், வாரிசு மற்றும் புஷ்பா படங்கள் இவருக்கு நேஷனல் கிரஷ் என்ற பட்டப்பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது. தொடர்ந்து பான் இந்தியா ஸ்டாராக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர இந்தப் படங்கள் அவருக்கு துணையாக அமைந்தன. இந்நிலையில் நேஷனல் கிரஷ் என்ற பட்டப்பெயர் அவருடைய படங்களின் வெற்றிக்கு எந்தவகையிலும் உதவவில்லை என்றும் அத்தகைய பெயர்களில் தனக்கு எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை என்றும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
பட்டப்பெயர்கள் உதவாது: மாறாக தன்னுடைய வெற்றிக்கு ரசிகர்கள் தன்மீது கொண்ட அன்பே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் பட்டப்பெயர்களால் ரசிகர்கள் அழைப்பார்கள். இவை வெறும் பட்டப்பெயர்கள் மட்டுமே, மாறாக ரசிகர்கள் உங்கள்மீது கொண்ட அன்பு மட்டுமே டிக்கெட்டுகளாக மாறும் என்றும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டில் கன்னடத்தில் கிரிக் பார்ட்டில் படத்தின்மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார் ராஷ்மிகா. அந்த ஒரு படத்தில் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகும் முடிவுடன்தான் அவர் அந்தப் படத்தில் நடித்ததாக முன்னதாக பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
வெற்றிக்கு காரணம் ஆனால் தற்போது 24 படங்களில் நடித்து முடித்துள்ளார் ராஷ்மிகா. இதறகு தன்னுடைய உழைப்பும் காரணம் என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார். தன்னைவிட அழகான பல ஹீரோயின்ஸ் உள்ளதாகவும் அதில் பலர் திறமையானவர்களாக உள்ளதாகவும் கூறியுள்ள ராஷ்மிகா, தான் தன்னுடைய பாதையில் செல்வதாகவும் தன்னுடைய ரசிகர்களுக்காக எதையும் செய்ய தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் தன்னுடைய ரசிகர்களுடன் சிறப்பாக கனெக்ட் ஆவதாக தான் நினைப்பதாகவும் அந்த வழியிலேயே தான் செல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேஷனல் கிரஷ் ராஷ்மிகா: கடந்த இரு ஆண்டுகளில் ராஷ்மிகா நடிப்பில் வெளியான அனிமல் மற்றும் புஷ்பா 2 படங்கள் இரண்டுமே 1000 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ராஷ்மிகா, எந்த மொழிப் படங்களாக இருந்தபோதிலும் ஒரே மாதிரியான உழைப்பையே தான் கொடுப்பதாகவும் ஆனால் ரசிகர்களிடம் தான் மொழியை கடந்த அன்பை பெற்ற வருவதாகவும் இதையடுத்து தான் தன்னுடைய தூக்கத்திற்கு குட்பை சொல்லும் சூழலில் உள்ளதாகவும் ராஷ்மிகா மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











