வரிசையா படங்கள்… ஒரே பிஸி… ஓய்வெடுக்க பாரீஸ் பறந்த ராஷ்மிகா மந்தனா!
சென்னை : தாறுமாறான அழகு, சுண்டி இழுக்கும் உடல்வாகு என ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. எக்ஸ்பிரஷன் குயினாக வலம் வரும் ராஷ்மிகா நேஷனல் க்ரஷ் என்ற பட்டத்தைப் பெற்றார்.
பல திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, தற்போது பாரீஸிற்கு ஜாலி ட்ரிப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பாரிஸில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகின்றன.

ராஷ்மிகா மந்தனா
கிரிக் பார்ட்டி என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இப்போது, அல்லு அர்ஜுன் ஜோடியாக 'புஷ்பா' என்ற படத்தில் நடித்துள்ளார் . இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ந் தேதி வெளியாக உள்ளது.

ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில்
செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள இத்திரைப்படத்தில், செம்மரக்கடத்தல் காரனாக அல்லுஅர்ஜூன் நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ராஷ்மிகா பழங்குடியின பெண் கெட்டப்பில் இருந்தார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பக்காவாக அதில் பொருந்தி நடிக்கும் ராஷ்மிகாவுக்கு அந்த அந்த கெட்டபிலும் பக்காவாக உள்ளார்.

பாலிவுட்டில்
மிஷன் மஞ்சு என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தனது அறிமுகத்தை கொடுத்த ராஷ்மிகா, தற்போது அமிதாப் பச்சனுடன் குட்பை திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனால் அங்கும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உருவாகி உள்ளது.
Recommended Video

பாரீஸில்
படங்களில் பிசியாக நடித்து வந்த ராஷ்மிகா, பாரீஸில் ஓய்வாக பொழுதை கழித்து வருகிறார். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதில்,பாரிஸில் எனது முதல் நாள் இப்படித்தான் இருந்தது. என்ன நடந்தது என்பதை குறுஞ்செய்தி மூலம் உங்களுக்குச் சொல்வதை விட, எனது பாரிஸ் பயணத்தின் புகைப்படத்தின் மூலம் செய்ய நினைத்தேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











