Don't Miss!
- Technology பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பான் இந்தியா நாயகியாக மாற்றிய புஷ்பா படம்.. ராஷ்மிகா மந்தனா உற்சாகம்!
ஐதராபாத் : நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டிலும் குட் பை படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 7ம் தேதி ரிலீசாகவுள்ளது.
தற்போது இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் ராஷ்மிகா.
அந்த நடிகருடன் காதலா…? இது ரொம்ப அழகா இருக்கே... ரசிகர்களை குழப்பும் ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் அறிமுகமான நிலையில், கீதா கோவிந்தம் படம் இவருக்கு சிறப்பான ஏற்றத்தை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தின்மூலம் தான் ரசிகர்களின் கவனம் தன்மீது திரும்பியதாக ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
புஷ்பா படம்
தொடர்ந்து அல்லு அர்ஜுனுடன் இணைந்து சுகுமார் இயக்கத்தில் இவர் நடித்த புஷ்பா படம் நாடு முழுவதும் சிறப்பான நடிகையாக ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. புஷ்பா படத்தை பொருத்தவரை ஒரு சிறந்த படத்தை எடுத்துள்ளோம் என்ற நம்பிக்கை இருந்ததாகவும் ஆனால், அது ரசிகர்களிடையே எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து தெரியாமல் இருந்ததாகவும் ஆனால் படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
விஜய்யுடன் வாரிசு படம்
தமிழில் நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. முன்னதாக நடிகர் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்திருந்த ராஷ்மிகா, மீண்டும் கார்த்தி -ராஜு முருகன் கூட்டணியில் உருவாகும் ஜப்பான் படத்திலும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. டோலிவுட், கோலிவுட் பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் ராஷ்மிகாவின் கைவசம் 3 பாலிவுட் படங்கள் உள்ளதாம்.
அமிதாப்புடன் குட் பை படம்
இதில் அமிதாப்புடன் இணைந்து ராஷ்மிகா நடித்துவரும் குட்பை படம் வரும் அக்டோபர் 7ம் தேதி திரையரங்குளில் ரிலீசாக உள்ளது. இதற்கான பிரமோஷன்களில் மும்பையில் ஈடுபட்டு வரும் ராஷ்மிகா, பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். புஷ்பா படம் தன்னை பான் இந்தியா ஸ்டாராக மாற்றியுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பான் இந்தியா ஸ்டார்
இந்தப் படம் தன்னை நாடு முழுவதும் சிறந்த நடிகையாக கொண்டு சேர்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இதனிடையே, விஜய்யுடன் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கிலும் நடித்துவருகிறார். இந்தப் படம் வரும் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளது.
வெயிட்டான கேரக்டரில் ராஷ்மிகா
ராஷ்மிகாவிற்கு புஷ்பா படம் மிகவும் சிறப்பாக கைக்கொடுத்தது. ஸ்ரீவள்ளி என்ற கிராமத்து பெண்ணாக இந்தப் படத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா. தன்னுடைய கெட்டப்பை முற்றிலும் மாற்றிக் கொண்டு அவர் நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தில் அவரது கேரக்டர் மேலும் வெயிட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.